districts

img

நீட் தேர்வு பயத்தில் மாணவன் தற்கொலை நீதி கேட்டு மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

சேலம்,மார்ச்27- நீட் தேர்வு பயத்தில் தற்கொலை செய்து கொண்ட மாணவனின் மரணத்திற்கு நீதி வேண்டும், தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற் றப்பட்ட நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்கிற தீர்மா னத்தை ஆளுநர் ஒப்புதல் வழங்க வலியுறுத்தி சேலத்தில், இந்திய மாணவர் சங்கதினர் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில்,   தமிழகத்தில் அனிதா முதல் சந்துரு வரை நீட் தேர்வு பயத்தால் எண்ணற்ற மாணவ மாண விகள் தற்கொலை செய்து கொண்டு உள்ள னர்.ஒன்றிய மோடி அரசாங்கம் நீட் தேர்வை ரத்து  செய்ய வேண்டும், தமிழக சட்டமன்றத்தில் நீட் தேர்வுக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மா னத்தை தமிழக ஆளுநர் அங்கீகரிக்க வேண்டும் என வலியுறுத்தினர். ஆர்ப்பாட்டத்தில் இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் எஸ். பவித்ரன், மாவட்ட தலைவர் அருண்குமார், மாவட்ட குழு உறுப்பினர்கள் டார்வின், கோகுல் உள்ளிட்டு 50க் கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். மாணவர் சங்கத்தின் இந்த திடீர் போராட்டத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.