திருப்பூர், ஜன.24- பல்லடம் அருகே பள்ளியின் நிர்வா கக் குழுவிற்குள் உள்ள பிரச்சனையால், 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வு எழுத இருக்கும் மாணவர்கள் அவதிக்குள்ளாவ தாக கூறி பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த சாமளாபுரம் அருகே லிட்ரசி பள்ளி செயல் பட்டு வருகிறது. இப்பள்ளியில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த 1௦௦௦ க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்ற னர். பள்ளி அறங்காவலர் குழு செயலாளரான ராமமூர்த்தி என்பவர் பள்ளி நிர்வாகத்தை நடத்தி வருகின்றார். அறங்காவலர் குழுவில் உறுப்பினராக இருந்த செந்தில்குமார் மற் றும் சில உறுப்பினர்களை சில மாதங்களுக்கு முன்பு குழுவிலிருந்து நீக்கியுள்ளனர். நீக்கப் பட்டவர்கள் இது குறித்து நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில் தற்போது வழக்கு விசாரனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பள்ளிக்கு வந்த செந்தில்குமார் தரப்பி னர் நீதிமன்றத்திலிருந்து தீர்ப்பு வந்து விட்ட தாகவும், இனிமேல் பள்ளி நிர்வாகத்தை தாங்கள் நடத்த போவதாகவும், பள்ளியை விட்டு ராமமூர்த்தியை வெளியேறுமாறும் கூறியுள்ளனர். இதையடுத்து இரு தரப்புக் கும் இடையே வாகுவாதம் ஏற்பட்ட நிலை யில், மங்கலம் காவல் நிலையத்தில் செந்தில் குமார் தரப்பினர் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் மங்கலம் போலீசார் விசா ரனை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நெருங்கும் நிலையில், இரு தரப்புக்கும் இடையே நடை பெறும் பிரச்சினையால் மாணவர்கள் கல்வி பாதிப்பதாக கூறி பெற்றோர்கள் புதனன்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பள்ளி நிர்வாகத்தை மாற்றினால் மாணவர் களின் படிப்பு கேள்விக்குறியாகும். எனவே பள்ளி நிர்வாகத்தை மாற்ற வேண்டாம் என்று கூறி பெற்றோர்களும் மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத் திற்கு வந்த பல்லடம் டிஎஸ்பி விஜயகு மார், மங்கலம் போலீசார், மாவட்ட கல்வி அலுவலர் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்ப டும் என மாவட்ட கல்வி அலுவலர் தெரிவித் ததை தொடர்ந்து பெற்றோர்கள் மற்றும் மாண வர்கள் போராட்டத்தை கைவிட்டு கலந்து சென்றனர்.