districts

img

பழங்கால வாத்தியங்களை வாசித்த மாணவர்கள்

கோவை, ஜன.4- கோவை அருகே அரசு  பள்ளி மாணவிகள் பழங்கால  வாத்தியங்கள் வாசித்துக் காட்டியதை மாவட்ட ஆட்சி யர் வியந்து பார்த்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கோவை மாவட்டம், சூலூர் அடுத்த அரசூர் கிரா மத்தில் செயல்பட்டு வரும் அரசு மேல்நி லைப் பள்ளியில் முற்றிலும் கணினி மயமாக் கப்பட்ட கணித பொறியியல் வகுப்பறையை கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார்  பாடி புதனன்று துவக்கி வைத்தார். முன்ன தாக மாவட்ட ஆட்சியரை வரவேற்கும் வகை யில் பள்ளியில் பயிலும் மாணவிகள் பழங் கால வாத்தியங்களை ஆட்சியர் முன்பாக  வாசித்துக் காட்டி அசத்தினர். இதனை மெய்மறந்து பார்த்த ஆட்சியர், மாணவி களுக்கு பாராட்டு தெரிவித்தார். இதனை அப்பள்ளி ஆசிரியர்கள் தங்களது செல்போனில் வீடியோ எடுத்து முகநூல், வாட்ஸ் அப், எக்ஸ் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் பதிவேற்றி உள்ளனர். இந்த காட்சிகள் தற்போது நெட்டிசன்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.