districts

img

கல்வட்டங்களை ஆய்வு செய்து ஆவணப்படுத்தும் கேரள பாளை செயின்ட் தாமஸ் கல்லூரி மாணவர்கள்

உடுமலை மார்ச் 22- உடுமலை பகுதியில் இருக்கும் கல்வட் டங்கள், பழமையான சிற்பங்கள் மற்றும் மக்க ளின் வாழ்க்கையை ஆய்வு செய்து ஆவணப் படுத்தும் முயற்சியில் கேரள மாநிலத்தின் பாளை செயின்ட் தாமஸ் கல்லூரி மாணவர் கள் ஈடுபட்டுள்ளனர். உடுமலை அருகே மெட்ராத்தி பகுதிக ளில் பெருங்கற்கால சின்னங்கள் ஏராளமாக  இருந்தன. அவை நாளுக்குநாள் ஒவ்வொன் றாகக் குறைந்து, அழிந்து வருகிறது. 1960  இல் ஒன்றிய அரசின் தொல்லியல் ஆவணங் களில் 125க்கும் மேற்பட்ட கல்வட்டங்கள் இருந்த இப்பகுதியில் தற்போது 42 கல் வட்டங் களே உள்ளன. கடந்த 2018 - 2019 காலகட்டங் களில் உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத் தின் சார்பில் ஆவணப்படுத்திய போது 80க் கும் மேற்பட்ட கல்வட்டங்கள் இருந்தன. தற் போதுள்ளதில் முழுமையாக 25 கல்வட்டங்க ளும், சிதிலமடைந்த நிலையில் 17 கல்வட்டங் களும் உள்ளன.  தென்கொங்குப் பகுதி பெருங்கற்கால பகுதி என்பதையும், குரும்பபாளையம் முதல்  கருவூர் வரை செல்லும் பெருவழியில் அமைந்தது இப்பகுதி. இதற்குச் சான்றாக உரம்பூர் பகுதியில் 15 அடி நெடுங்கல்லும், சோமவாரப்பட்டி கொங்கல் நகரம் பகுதியில்  18 அடி நெடுங்கல்லும் இன்றும் சான்றாக நிற்கி றது. அதேபோல் மெட்ராத்தி ஊருக்கு வடக்கே  காட்டுப் பகுதியில்  125க்கும் மேற் பட்ட  12க்கு 12 , 10க்கு 10  மற்றும் 6க்கு 6 எனும்  அளவுகளில்  கல்வட்டங்கள் இருந்தன.

உடு மலை வரலாற்று ஆய்வு நடுவத்தின் பதிவு களில் பார்த்த கல்வட்டங்களை கேரள பாளை  பகுதியல் இருக்கும் தொல்லியல் துறையில்  படிக்கும் மாணவர்கள் நேரில் பார்த்து ஆய்வு  செய்து ஆவணப்படுத்தும் பணிகளில் ஈடு படுத்தினர். ஒவ்வொரு கல்வட்டங்களின் உள்வட்ட  அளவினையும், வெளி வட்ட அளவினையும்.   பெருங்கற்களின் உயரம் மற்றும் அகலங்க ளின் அளவினையும் ஆய்ந்தரிந்து ஆவ ணப்படுத்தினர். இதுகுறித்து அந்த ஊர் மக்களிடம் கேட்ட போது, இதை மயானக்காடு என்று அழைத்த னர் எனவும், தற்போது அது வழக்கொழிந்து வருவதாகவும், ஏராளமாக பெரிய பெரிய  கற்கள் இருந்தது. தற்போது காலப்போக்கில்  ஒவ்வொன்றாக  அழிந்து வருவதையும் குறிப் பிட்டு சொல்கின்றனர். ஒன்றிய, மாநில அரசுகளின் தொல்லி யல்துறையின் கவனத்திற்குக் கொண்டு செல் லப்பட்டும்,  இவ்வாறான வரலாற்றுச் சின்னங் கள் அழிந்து வருவது வரலாற்று ஆய்வாளர்க ளுக்கு மிகுந்த வேதனையை உண்டாக்கி உள் ளது. கேரள செயிண்ட் தாமஸ் பாளை பகுதி வர லாறு மற்றும் தொல்லியல் துறை சார்ந்த  எபி  டேவிட், சுபப்பிரியன் ஆகியோர் உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தின் உதவியுடன் ஆவணப்படுத்தினர்.