அவிநாசி, மே 29- அவிநாசி அரசு கலைக்கல்லூரி மாணவர்களிடம் இந்திய மாணவர் சங்கத்தினர் இலங்கை நாட்டில் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் மக்களுக்காக நிதி வசூல் செய்தனர். இந்தியாவுக்கு அருகே இருக்கும் இலங்கை நாடு மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. இதன் காரணமாக அப்பகுதி மக்கள் அரசாங்கத் திற்கு எதிராகவும் போராடி வருகின்றனர். அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இந்நி லையில், இலங்கையில் வாழும் மக்களுக்காக இந்திய மாணவர் சங்கத்தினர் அவிநாசி அரசு கலைக்கல்லூரி மாண வர்களிடம் நிதி சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர். இதில், மாணவர் சங்க மாவட்ட நிர்வாகிகள் பிரவீன், பாலமுரளி, மணிகண்டன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.