districts

img

அரசு பள்ளி வாசலை மறைத்து பாஜக ஆர்ப்பாட்டம் ஒலி பெருக்கி அலறலால் மாணவர்கள் படிப்பு பாதிப்பு

அன்னூர், டிச.7- அன்னூர் ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியின் நுழைவு வாசலில் மேடை அமைத்து பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டதால் குழந்தைகளுக்கு பாடம் நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. கோவை, அன்னூர் சுற்றுவட்டார பகுதி களில்  தொழில் பூங்கா அமைக்க விவசாய  நிலங்கள் கையகப்படுத்த எதிர்ப்பு தெரி வித்து விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாயிகளுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம் என்கிற பெயரில் கடந்த இரண்டு நாட்களாக  பாஜகவினர் அலப்பறை செய்து வரு கின்றனர். பிரதான சாலைகளில் கொடி  கட்டக்கூடாது, ப்ளக்ஸ் பேனர் வைக்கக் கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாங்கள் எதையும் மதிக்கமாட்டோம் என்கிற வகையில், கொடிகள், பேனர்களை கட்டினர். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த காவல்துறை அதிகாரிகள் பேனர்களை அகற்றுமாறு கேட்க அவர்களிடம் பாஜக வினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.  இந்நிலையில் புதன்ன்று பாஜக சார்பில்  ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டத்திற்காக அன்னூர் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி யின் முன்பாக மேடை அமைக்கப்பட்டது. பிற்பகல் 2 மணி முதலே பாஜகவினர் ஒலி பெருக்கையை அலறவிட்டனர். இதன் கார ணமாக பிற்பகலுக்கு பின்னர் குழந்தை களுக்கு பாடம் நடத்த முடியாத சூழல் நிலவியது. வகுப்பறையில் அமைதியான சூழல் இல்லாததால் குழந்தைகளும் பாடங் களில் கவனம் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது. பள்ளிகளின் அருகில் இது போன்று குழந்தைகளின் கல்வி  பாதிக்காத அளவிற்கு  அரசியல் கட்சியினருக்கும், பொது அமைப்புகளுக்கும் வருங்காலத்தில்  காவல் துறையினர் அனுமதி அளிக்க வேண்டும் எனவும் குழந்தைகளின் பெற் றோரும் சமூக ஆர்வலர்களும் வலியுறுத்தி யுள்ளனர்.