கோவை, ஜூன் 20- பாரதியார் பல்கலைக்கழகத்தின் தொலை தூர பருவத்தேர்வு மையங்களை அதிகரிக்க வேண்டும் என இந்திய மாணவர் சங்கத்தினர், பாரதியார் பல்கலை கழக பதிவாளரிடம் மனு அளித்தனர். இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலத் தலை வர் தௌ.சம்சீர் அகமது, மாநில செயற்குழு உறுப்பினர்கள் சா.பிரவீன் குமார், பவித்ரன் ஆகியோர் அளித்த மனுவில் தெரிவித்திருப்பதா வது, பாரதியார் பல்கலைக்கழகத்தின் தொலை தூர பருவத் தேர்வு மையங்கள் கடந்தாண்டு வரை கேரள மாநிலத்தில் சில மையங்களிள் அமைக்கப் பட்டிருந்தன. ஆனால், இந்த ஆண்டு கேரளா மாநி லத்தில் எந்த இடத்திலும் பருவத் தேர்வு மையங் கள் அமைக்கப்படவில்லை. இதனால், தமிழகம் மற்றும் கேரளாவை சேர்ந்த கேரளாவில் வசித்து தொலை தூரக் கல்வி பயின்று வரும் மாணவர்கள் இந்த ஆண்டு பருவத்தேர்வு எழுத சிரமப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. மாணவர் களின் சிரமத்தை கருத்தில் கொண்டு, கடந்த ஆண்டுகளில் கேரள மாநிலத்தில் தேர்வு மையங் கள் அமைக்கப் பட்டிருந்தது போல இந்த ஆண்டும் தேர்வு மையங்கள் அமைக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளனர்.