தாராபுரம், ஜூலை 21- தாராபுரம் ஜின்னா மைதானம் பகுதியை சேர்ந்த சாகுல் அமீது என்பவரின் மகன் முகம்மது வாசித் (20) இவர் அதே பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் 2 ஆம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் அமராவதி ஆற்றில் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதால் உடன் படிக்கும் 4 நண்பர்களுடன் புதனன்று மாலை, குளிப்பதற்கு தடை செய்யப்பட்ட நீரேற்று நிலையம் அருகில் உள்ள தடுப்பணைக்கு குளிக்க சென் றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி னார். இதனால் அதிர்ச்சியடைந்த நண்பர்கள் அவரது பெற்றோருக்கும், தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் அளித்தனர். தீயணைப்பு நிலைய அலுவலர் ஜெயசந்திரன் தலைமையிலான 10க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர் கள் முகமது வாசித்தை தேடும் பணியில் ஈடுபட்டனர். இரவு நேரமானதால் மீட்பு பணி நிறுத்தப்பட்டது. தொடர்ந்து வியாழன்று காலை மீட்பு பணி நடைபெற்றது. அப்போது தடுப் பணைக்குள் சேற்றில் சிக்கி உயிரிழந்த நிலையில் முகம்மது வாசித் உடலை மீட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தடுப்பணைப் பகுதியில் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந் தாலும் உரிய தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கபடாததால் பொதுமக்கள் தடையை மீறி குளிக்க செல்கின்றனர். இதுவரை இந்த தடுப்பணை பகுதியில் மூழ்கி 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். எனவே தடுப்பணை பகுதி யில் பலமான தடுப்பு வேலிகளை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.