திருப்பூர், பிப்.24- திருப்பூர் மாநகராட்சி பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் தாக்குதலுக்கு உள்ளான மாணவர் ஒருவர் மருத் துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவத் தைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட மாணவரின் பெற்றோர் உள் ளிட்டோர் அரசுப் பள்ளி தலைமை ஆசிரியரை முற்றுகை யிட்டு, மாணவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண் டும், தாக்குதல் நடத்திய மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் விசா ரணை மேற்கொண்டிருக்கிறார். அதன் அடிப்படையில் நட வடிக்கை எடுக்கப்படும் என கல்வித் துறையினர் தெரிவித்த னர்.