தருமபுரி, ஜூன் 2- மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை அளித்த பாஜக நாடாளுமன்ற உறுப்பினரை கைது செய்ய வலியுறுத்தி மாதர், மாணவர், வாலிபர் சங்கத்தினர் வெள்ளியன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மல்யுத்த வீரஙகனைகளை கைது செய்து போலீசாரை கண்டித்தும், பாலியல் வன்கொடுமை செய்த பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் பிரிஜ் பூசன் மீது நடவடிக்கை எடுக்க கோரி இந் திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற் றும் மாதர் சங்கம் சார்பில் தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு வெள்ளியன்று ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு, வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் எம்.அருள்கு மார் தலைமை ஏற்றார். அனைத்திந் திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஆர்.மல்லிகா, மாவட்ட தலைவர் ஏ.ஜெயா, மாவட்ட துணைத்தலைவர் கே.பூபதி, மாவட்ட துணை செயலாளர் தனலட்சுமி, நகர செயலாளர் நிர்மலா ராணி, ஒன்றிய தலைவர் தமிழ்மணி ஒன்றிய செய லாளர் எம்.மீனாட்சி, வாலிபர் சங்க மாவட்ட பொருளாளர் சிலம்பரசன், உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.
திருப்பூர்
பாலியல் குற்றவாளியான பாஜக எம்பி பிரிஜ் பூஷன் சரண் சிங்கை கைது செய்ய வலியுறுத்தி மாதர் சங்கம், வாலிபர் சங்கம், மாணவர் சங்கம் சங்கம் சார்பில் வெள்ளியன்று திருப்பூரில் பிஎஸ்என்எல் அலுவ லகத்தை முற்றுகையிட்டு போராட் டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர் பேருந்து நிலையம் அருகே உள்ள பிஎஸ்என்எல் அலுவ லகத்தை அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் தமிழ் மாநில செயலா ளர் ராதிகா தலைமையில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. இதில், மாதர் சங்க மாவட்ட தலைவர் பவித்ரா, மாவட்டச் செயலாளர் கு. சரஸ்வதி, மாவட்ட பொருளாளர் கவிதா, வாலிபர் சங்க மாவட்ட தலைவர் அருள், மாவட்ட செய லாளர் மணிகண்டன், பொருளாளர் பாலமுரளி, மாணவர் சங்க மாவட்ட நிர்வாகிகள் கல்கி ராஜ், மணிகண்டன் உட்பட திரளானோர் பங்கேற்றனர். நாமக்கல் பள்ளிபாளையம் பேருந்து நிறுத் தம் அருகே இந்திய ஜனநாயக வாலி பர் சங்கம் தெற்கு ஒன்றிய குழு சார்பில் ஆர்ப்பாட்டம் வெள்ளியன்று நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றி யக்குழு தலைவர் லட்சுமணன் தலைமை வகித்தார். இந்த ஆர்ப் பாட்டத்தில், பாலியல் குற்றவாளி, பாஜக எம்பியான பிரிட்ஜ் பூசன் கரன்சிங்கை உடனடியாக கைது செய்திட வேண்டும் வலியுறுத்தி சங்க மாவட்ட செயலாளர் மணிகண்டன் கண்டன உரையாற்றினார். ஒன்றிய செயலாளர் நவீன், முன்னாள் வாலி பர் சங்க தலைவர் ஆர்.ரவி, துணை செயலாளர் ஜெகதீஸ், மாவட்டக் குழு உறுப்பினர் கௌசல்யா உட்பட திரளானோர் பங்கேற்றனர்.