அவிநாசி, ஜன.24- அவிநாசி அருகே அம்மாபாளை யம் பகுதிகளில் பாறைக் குழியில் குப்பை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரி வித்து அப்பகுதியைச் சேர்ந்த பொது மக்கள் திங்களன்று வீடுகளில் கருப்பு கொடி கட்டினர். திருமுருகன்பூண்டி நகராட்சிக்குட் பட்ட அம்மாபாளையம் பகுதியிலுள்ள பாறை குழியில் மாநகராட்சி குப்பை கள் கொட்டப்பட்டு வருகின்றன. இத னால் அப்பகுதி பொதுமக்களுக்கு சுகாதார சீர்கேடுகள் ஏற்பட்டு வரும் நிலையில், இது சம்பந்தமாக அப்பகுதி யைச் சேர்ந்த பொதுமக்கள் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தி வருகின்ற னர். இருப்பினும் மாநகராட்சி நிர்வா கம் தினசரி குப்பைகளை கொட்டி வரு கின்றது. இப்பிரச்சனையில் மாவட்ட நிர்வாகமும் மவுனம் காத்து வருகிறது. இந்நிலையில், அம்மாபாளையம் பகுதியைச் சேர்ந்த ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புவாசிகள் மாநக ராட்சி நிர்வாகத்தை கண்டித்து வீடுக ளில் கருப்புக் கொடிகளை கட்டி எதிர்ப்பு தெரிவித்தனர். இப்போராட் டத்தை தொடர்ந்து திங்களன்று குப்பை கொட்ட வந்த லாரிகள் மாநகராட்சி எல் லைக்குள்ளேயே நிறுத்தம் செய்யப் பட்டு காத்துக்கிடக்கின்றன.