districts

img

சிப்காட்டை எதிர்த்து போராட்டம்

நாமக்கல், ஆக 5 - நாமக்கல் மாவட்ட சிப்காட் எதிர்ப்பு குழுவினர் வருகிற 8 ஆம் தேதி சென்னையில் சிப்காட் நில ஆணையர் அலுவல கத்தை முற்றுகையிட்டு தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவது என முடிவெடுத்துள்ளனர்.  நாமக்கல் மாவட்டம், மோகனூர் வளையப்பட்டி பகுதி யில், தமிழக அரசு சார்பில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்க உள்ளனர். இதனை எதிர்த்து சிப்காட் எதிர்ப்பு குழுவி னர் மற்றும் உள்ளூர் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் போராட் டங்களை சில மாதங்களாக  நடத்தி வருகின்றனர். ஆனால், அரசு நிர்வாகம் இதுவரை செவி சாய்க்காத நிலை யில், சென்னை எழும்பூர் சிப்காட் ஆணையர் அலுவல கத்தை வருகிற ஆக 8ம் தேதி முற்றுகையிட்டு, தொடர் உண்ணாவிரதம் செய்யப் போவதாக எதிர்ப்பு குழுவினர் தெரி வித்தனர்.  மேலும் முன்னதாக சிப்காட் தொழிற்சாலை அமைப் பதை கைவிட வேண்டும் என வலியுறுத்தி ஏராளமானோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்களன்று மனு அளித்த னர்.