இடுவாய் ஊராட்சியில் ரூ.97 ஆயிரத்தில் தெருவிளக்குகள்
திருப்பூர், ஏப். 27 – திருப்பூர் ஒன்றியம், இடுவாய் ஊராட்சியில் உள்ள தாந் தோணி அம்மன் நகரில் கூடுதல் மின்விளக்குகளும், சிவசக்தி நகரில் புதிய தெருவிளக்குகளும் ரூபாய் 97 ஆயிரத்து 161 மதிப்பீட்டில் அமைக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. சிவசக்தி நகரில் புதிய தெரு விளக்குகளை இடுவாய் ஊராட்சி மன்றத் தலைவர் கே.கணேசன் புதனன்று இயக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஊராட்சி செயலாளர், இடுவம் பாளையம் செல்வகுமார், கண்ணன், ஏசு, சிவசக்தி நகர் பொது மக்களும் திரளாக கலந்து கொண்டனர். புதிய மின் விளக்குகள் அமைத்துக் கொடுத்ததற்கு ஊராட்சி தலைவருக்கும், நிர்வாகத்திற்கும் நன்றி தெரிவித்த அப்பகுதி மக்கள், விரைவில் இந்த பகுதிக்கு குடிநீர் வசதி ஏற்படுத்தித்தர வேண்டும் கோரிக்கை வைத்தனர். விரைந்து நடவடிக்கை எடுப்பதாக ஊராட்சித் தலைவர் கே.கணேசன் தெரிவித்தார்.
எஸ்.வி.காலனி வாலிபர் சங்க கிளை நிர்வாகிகள் தேர்வு
திருப்பூர், ஏப். 27 – இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் திருப்பூர் வடக்கு மாநகர எஸ்.வி.காலனி கிளை புதிய நிர்வாகிகள் புத னன்று தேர்வு செய்யப்பட்டனர். எஸ்.வி காலனி கிளை பேரவை கூட்டம் கிளை அலுவலகத் தில் எஸ்.லோகு பாரத் தலைமையில் நடைபெற்றது வடக்கு மாநகர தலைவர் எஸ்.கண்ணன், துணைத் தலைவர் சரத்கு மார், கமிட்டி உறுப்பினர் பிரவீன் குமார் கலந்து கொண்டு வாழ்த்திப் பேசினர். இக்கூட்டத்தில் கிளைத் தலைவர் எஸ். லோகு பாரத், துணைத்தலைவர் கே.தீபாஸ்ரீ, செயலாளர் ஜி.கிஷோர் குமார், துணைச்செயலாளர் ஹரிஷ் குமார் ஆகி யோர் தேர்வு செய்யப்பட்டனர். எஸ்.வி.காலனி பகுதி அடிப்படைப் பிரச்சனைகளில் தலையிட்டு உடனடியாக இயக்கம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
மஞ்சப்பை தானியங்கி இயந்திரம் திறப்பு
திருப்பூர், ஏப். 27 - திருப்பூர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் மு.கருணாநிதி பேருந்து (பழைய) நிலையத்தில் ரூ. 10 விலையில் மஞ்சள் பை வழங்கும் தானியங்கி இயந்திரத்தை மேயர் ந.தினேஷ் குமார், திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் க.செல்வ ராஜ் ஆகியோர் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்த னர். இந்நிகழ்ச்சிக்கு மாநகராட்சி ஆணையர் பவன்குமார் கிரியப்பனவர் தலைமை ஏற்றார். இந்த மஞ்சப்பை இயந்திரத் தின் மூலம் நாள் ஒன்றுக்கு 300 பைகள் நிரப்பப்படும். பைகள் தீரும் பட்சத்தில் உடனடியாக இயந்திரத்தில் பைகள் நிரப்பப் படும். ரூ.10 நாணயம் அல்லது நோட்டுகளாக இந்த இயந்திர த்தில் செலுத்தி பொதுமக்கள் மஞ்சள் பைகளை பெறலாம். முதல்முறையாக இதுபோன்ற தானியங்கி இயந்திரம் திருப் பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக தரைதளத்தில் வைக்கப் பட்டுள்ளது.
பேராசிரியர்கள் பணி நிறைவு பாராட்டு விழா
திருப்பூர், ஏப்.27– திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் 2022-2023 கல்வியாண்டில் ஓய்வுபெறும் பேராசியர்களுக்கு பணி நிறைவு பாராட்டு விழா புதனன்று இக்கல்லூரியில் உள்ள கும ரன் அரங்கில் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் தலைமை வகித்தார். தமிழ் நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகத்தின் மாநில தலைவர் வீர மணி கலந்து கொண்டு ஓய்வு பெறும் பேராசிரியர்கள் இந்தி ராணி (தமிழ் துறை), வளர்மதி (ஆங்கிலத்துறை), ராஜசேக ரன், கோபண்ணசாமி (வணிகவியல் துறை), பாண்டியன் (விலங்கியல் துறை ஆய்வக உதவியாளர்) ஆகியோரின் பணி களை நினைவு கூர்ந்து பாராட்டினார். ஓய்வு பெறுவோர் நெகிழ்ச்சியுடன் ஏற்புரை ஆற்றினர். தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழக கிளை நிர்வாகி கள், பேராசியர்கள், அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
வேதிப்பொருள் மூலம் செயற்கையாக பழுக்க வைத்த 2 டன் மாம்பழம் பறிமுதல்
திருப்பூர், ஏப்.27– திருப்பூரில் வேதிப்பொருட்களை வைத்து செயற்கை முறையில் பழுக்க வைத்த மற்றும் கெட்டுப்போன மாம் பழங்கள் 2 டன் அளவுக்கு பறிமுதல் செய்யப்பட்டது. திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை தலைமையில் உணவு பாது காப்புத்துறை அதிகாரிகள் குழுவினர் மூன்று குழுக்களாக பிரிந்து திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தினசரி மார்க்கெட், கே.எஸ்.சி.பள்ளி சாலை, பழ குடோன் வீதி ஆகிய இடங்களில் மாம்பழம் மொத்த மற்றும் சில்லறை விற்பனை நிலையங் களில் வியாழனன்று திடீர் சோதனை செய்தனர். அப்போது நான்கு குடோன்களில் இரண்டு டன் அளவி லான மாம்பழங்கள், வேதிப்பொருட்களை வைத்து செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்டதும், கெட்டுப் போனவையும் கண்டுபிடிக்கப்பட்டன. அந்த மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன. செயற்கை முறையில் வேதிப்பொருட்கள் மூலம் மாம் பழங்களை பழுக்க.வைத்த 12 மொத்த விற்பனை நிலையங் களுக்கு அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கி உள்ளனர்.
தாராபுரத்தில் பனை நுங்கு விற்பனை அமோகம்
தாராபுரம், ஏப்.27 - தாராபுரம் வட்டார பகுதியில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் பனை நுங்கு, பதநீர் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. கற்பக விருட்சம் என்று அழைக் கப்படுகின்ற பனை மரம் அதிக காலம் உயிர் வாழும் தன்மை கொண்டது. அதில் இருந்து கிடைக்கக்கூடிய பத நீர், நுங்கு, பனம்பழம், பனங் கிழங்கு, பனை ஓலை, பனை நார், பனங் கற்கண்டு, பனை மரம் என அனைத்து பொருட்களும் பல்வேறு வகையில் பயன்தரக்கூடியது. அந்த வகையில் பனைமரத்தில் இருந்து கிடைக்கக்கூடிய பனை நுங்கு தற்போது தாராபுரத்தில் பொள்ளாச்சி சாலை, உடுமலை சாலை, அலங்கியம் சாலை, தீய ணைப்பு நிலையம் அருகில் என அனைத்து இடங்களிலும் விற்பனை செய்யப்படுகிறது. அதனை ஏராள மான பொதுமக்கள் விரும்பி வாங்கி செல்கின்றனர். இதுகுறித்து தாராபுரத்தை சேர்ந்த வியாபாரி ஒருவர் கூறுகை யில், பனை மரத்தில் இருந்து கிடைக் கும் பதநீர் உடல் ஆரோக்கியத்தை காக்கும் ஊட்டச்சத்து பானம் ஆகும். பதநீரில் காரம், சர்க்கரை, சுண் ணாம்பு, இரும்பு உள்ளிட்ட பல்வேறு சத்துக்கள் நிரம்பியிருக்கிறது. இத னால் பதநீரை குடித்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். மேலும் நோய் இல்லாமல் நீண்ட காலம் வாழலாம். பனை மரத்தில் இருந்து கிடைக் கும் மற்றொரு பொருள் நுங்கு. இதில் இரும்பு சத்து அதிகம் உள்ளது. நுங்கை பதநீரில் போட்டு குடித்தால் உடலில் நீர் சத்து குறைபாடு ஏற்ப டாது. சுண்ணாம்பு சத்தும், இரும்பு சத்தும் அதிகரிக்கும். பனை மரத்தில் கொத்து கொத்தாக காய்க்கும் நுங்கை வெட்டி கொண்டு வந்து மக்க ளிடம் விற்பனை செய்கிறோம். மக் கள் விரும்பி சாப்பிடுவதால் கோடை காலத்தில் உடல் குளிர்ச்சியை உண் டாக்கி ஆரோக்கியத்தை கொடுக் கிறது. பதநீர், நுங்கு, பனம்பழம், பனை ஓலை, பனை நார் என பனைம ரத்தில் இருந்து கிடைக்கும் அனைத் தும் மனித குலத்திற்கு பயன் தரக்கூ டியதாகும். எனவே மக்கள் பனையில் இருந்து கிடைக்கும் அனைத்து பொருட்களையும் வாங்கி சாப்பிட்டு தங்கள் உடல் நலனை பாதுகாத்து கொள்ளாலாம். தற்போது பனை நுங்கு சீசன் என்பதால் தாராபுரம் வட்டார பகுதியில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் விற்பனைக்கு வந்துள் ளது. தாராபுரம் வட்டார பகுதியில் மணக்கடவு, கொங்கூர், அலங்கி யம், கோவிந்தாபுரம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளிலும் அமராவதி ஆற்றுப்படுகையில் ஏராளமான பனை மரங்கள் உள்ளன. ஒரு நுங்கு காயில் மூன்று கண்கள் கொண்ட பனை நுங்கு ரூ.20க்கும், பத்து நுங்கு ரூ.70க்கும் விற்பனை செய்து வருகி றோம். இதன் மூலம் எங்களுக்கு நல்ல வருவாய் கிடைக்கிறது, என் றனர்.
மே தினம்: டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு
திருப்பூர் ஏப்.27 - உழைப்பாளர் தினமான மே தினத்தன்று டாஸ்மாக் மதுபானக் கடைகள் அவற்று டன் செயல்பட்டு வரும் மது பானக் கூடங்கள், மனமகிழ் மன்றங்கள் மற்றும் உணவு விடுதிகளுடன் இணைந்து செயல்பட்டு வரும் அரசு உரி மம் பெற்ற மதுபானக் கூடங் கள் அனைத்தும் மூடப்பட வேண்டும். மீறி செயல் பட் டால் நடவடிக்கை எடுக்கப்ப டும் என்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் எஸ்.வினீத் வியா ழனன்று தெரிவித்துள்ளார்.
தாய் சேய் நல சிறப்பு பிரிவு பணிகளை விரைந்து முடிக்க சிபிஎம் வலியுறுத்தல்
அவிநாசி, ஏப்.27- அவிநாசி அரசு மருத்துவமனையில் தாய் சேய் நல சிறப்பு பிரிவு பணிகளை விரைந்து முடிக்க மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. அவிநாசி அரசு மருத்துவமனையை தரம் உயர்த்தக் கோரி முன்னாள் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோரிடம் மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சி அவிநாசி ஒன்றியக்குழு சார்பில் மனு அளிக் கப்பட்டது. இதையடுத்து, தேசிய சுகாதார இயக்கம் சார்பில் தாய் சேய் நலப்பிரிவு கட்டிடம் உருவாக்க ரூ.5.15 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இதில் மூன்று பிரசவ அறை, ஸ்கேன் அறை, வெளிப்புற நோயாளிகள் பிரிவு, பிரசவ முன் சிகிச்சை, வலிப்பு நோய் உள்ளோருக்கான பிரசவ சிகிச்சை பிரிவு, மருத்துவர் அறை, செவிலியர் அறை, மருந்தகம், கழிவறை வசதிகள் என பல்வேறு வசதிகளுடன் கூடிய அறை முதல் தளத்தில் தொடங்குவதற்கு உண்டான பணிகள் பொதுப்பணித் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதற் கான பணி தற்போது துவங்கி உள்ளது. இதற்கு மாநில அரசு ஏற்பாடு செய்திருப்பதை வரவேற் பதாகவும், மேலும் பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்றும் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
குப்பைகளை சேகரிக்கும் பணி தீவிரம்
உதகை, ஏப்.27- தேவர்சோலை பேரூராட்சிக்குட்பட்ட சாலையோர பகுதி களில் சுற்றுலா பயணிகள் வீசிச்சென்ற பிளாஸ்டிக் பாட்டில்கள், குளிர்பான பாட்டில்கள் உள்ளிட்டவற்றை தேவர்சாலை பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் சேக ரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர் விடுமுறையை அடுத்து, கேரளாவிலிருந்து ஏராள மான சுற்றுலா பயணிகள் கூடலூர் வழியாக உதகைக்கு வந்து சென்ற வண்ணம் உள்ளனர். பேருந்து, கார்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான வாகனங்கள் தினசரி வந்து செல்வதால், கடந்த மூன்று நாட்களாக பல்வேறு இடங்களில் போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், வாகனங் களில் வரும் சுற்றுலா பயணிகள் தாங்கள் கொண்டு வரும் தண்ணீர் பாட்டில்கள் மற்றும் குளிர்பான பாட்டில்கள் உள்ளிட்ட பல்வேறு பிளாஸ்டிக் பொருட்களை சாலை ஓரங் களில் வீசிச் செல்கின்றனர். அவற்றை தேவர்சோலை பேரூ ராட்சிக்குட்பட்ட தூய்மை பணியாளர்கள் சேகரித்து சுத்தம் செய்து வருகின்றனர்.
செம்மண் கடத்தல்: வருவாய்த் துறையினர் ஆய்வு
இளம்பிள்ளை, ஏப்.27- சேலம் அருகே குட்டையிலிருந்து பல லட்சம் மதிப்பிலான செம்மண் கடத்தல் குறித்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்ட நிலையில், வருவாய்த் துறையினர் நேரில் சென்று ஆய்வு நடத்தினர். சேலம் மாவட்டம், இடங்கணசாலை நகராட்சிக்கு உட் பட்ட 4 ஆவது வார்டு கொசவப்பட்டியில் குட்டை உள்ளது. இக்குட்டை அருகே சுமார் 3 ஏக்கர் பரப்பளவில் மக்கள் நடை பயிற்சிக்கும், சிறுவர்களுக்கான பூங்கா அமைக்க ரூ.34 லட்சம் மதிப்பில் பல்வேறு பணிகள் நடைபெற்று வரு கிறது. இந்நிலையில், அதே பகுதியை சேர்ந்த ராமராஜ் என்பவர் கடந்த 24 ஆம் தேதியன்று சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார். இதில், கொசவப் பட்டியில் குட்டையிலிருந்து நாள்தோறும் இரவு நேரங் களில் சுமார் 250 லோடு செம்மண் கடத்தப்படுகிறது என தெரிவித்திருந்தார். இதையடுத்து, புதனன்று சங்ககிரி வருவாய்த் துறை யினர் நேரில் சென்று குட்டையை கள ஆய்வு செய்தனர். இது குறித்தான அறிக்கையை மேலதிகாரிகளுக்கு அனுப்பினர். மேலும், மண் கடத்தப்படுவதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து கண்காணிப்பு பணிகளை வருவாய்த்துறையினர் தீவிரப் படுத்தி உள்ளனர்.
வெயில் கால எச்சரிக்கை
ஈரோடு, ஏப்.27- ஈரோடு மாவட்டத்தில் தற்போது கோடைவெயிலின் வெப்பநிலை அதிகரிக்கும் என்றும், வெப்ப அலையின் தாக்கம் இருக்கலாம் என்றும் இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. எனினும் பொதுமக்கள் இது குறித்து அச்சப்பட தேவையில்லை என தெரிவிக்கப் பட்டுள்ளது. இதுகுறித்து மேலும் ஆராய்ச்சி மையம் தெரிவிக்கையில், வெப்ப அலையின் தாக்கத்திலிருந்து காத்துக்கொள்ள நண் பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணிவரை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் (அத்தியாவசிய தேவைகள் தவிர) வெளியில் செல்வதையும், அதிகளவில் களைப்படைய வைக்கும் பணிகளை செய்வதை தவிர்க்கவும். உடலின் நீர்ச்சத்து குறையாமல் பராமரிக்கவும். தாகம் எடுக்கா விட்டாலும் கூட தேவையான அளவு தண்ணீர் அருந்த வேண் டும். வீட்டில் தயாரித்த நீர்மோர், லஸ்ஸி, புளித்த சோற்று நீர், எலுமிச்சைச் சாறு போன்ற பானங்களைப் பருகி நீரிழப் பைத் தவிர்க்கலாம். வெளிர் நிறமுள்ள, காற்றோட்டமான பருத்தி ஆடை களை அணியவும். வெயிலினால் சோர்வு, உடல்நலக் குறைவு ஏற்படும் பட்சத்தில் அருகிலுள்ள அரசு ஆரம்ப சுகா தார மையங்கள், அரசு மருத்துவமனைகளை அணுகவும். குழந்தைகளுக்கான வெப்பம் தொடர்பான நோய்களை கண்டறிய சிறுநீரை சோதித்துப்பார்க்கவும். மஞ்சள் நிற முள்ள சிறுநீர் நீரிழப்பை குறிக்கலாம். இதனை தவிர்க்க குடிநீர் மற்றும் இளநீரை பருகவும். முதியவர்கள் வெப்ப அழுத்தத்தால் பாதிக்கப்பட்டி ருப்பதாகத் தோன்றினால், அவர்களின் வெப்பத்தை தணிக்க ஈரமான துண்டுகளால் கழுத்து மற்றும் கைகளில் துடைக்க வேண்டும் மற்றும் குளிர்ந்த நீரில் குளிக்க வைக்க வேண்டும். போதிய இடைவேளையில் குடிநீர் அருந்த வேண்டும். மேலும், பருவநிலை மாற்றங்களில் இந்தாண்டு கோடை வெயிலின் வெப்பம் அதிகமாக உள்ளதால் மாடி வீடுகளிலும், கூரை வீடுகளிலும் உள்ள மின் கம்பிகள் உருகி எளிதில் தீ விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இரண்டு ஆண்டுகளில் பல்வேறு நலத்திட்டங்கள் நீலகிரி மாவட்ட ஆட்சியர் தகவல்
உதகை, ஏப்.27- நீலகிரி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான் மையினர் நலத்துறையின் மூலம் இரண்டு ஆண்டுகளில் பல் வேறு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன என்று மாவட்ட ஆட்சியர் சா.ப.அம்ரித் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, நீலகிரி மாவட்டத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளில் கிராமப்புற பெண் கல்வி ஊக்கத்தொகையாக 529 பயனாளிகளுக்கு ரூ.3 லட்சத்து 26 ஆயிரம், 540 உல மாக்கள் மற்றும் பணியாளர்களுக்கு நல வாரியத்தின் மூலம் ரூ. 32 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. முஸ்லீம் மகளிர் உதவும் சங்கத்தின் மூலம் 431 பயனாளிகளுக்கு ரூ.50 லட்சம், கிறிஸ்தவ மகளிர் உதவும் சங்கத்தின் மூலம் 129 பயனாளி களுக்கு ரூ.22 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளும், 4,898 பயனாளிகளுக்கு ரூ.152 லட்சத்து 28 ஆயிரம் மதிப்பில் கல்வி உதவித்தொகையும் வழங்கப்பட்டுள்ளது. 2021 – 2022 ஆம் கல்வியாண்டில் அரசு, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 11 ஆம் வகுப்பு பயிலும் பிற்படுத்தப் பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீா்மரபினர் இனத்தைச் சேர்ந்த 1,082 மாணவர்கள் மற்றும் 1,294 மாணவிகளுக்கு ரூ.121 லட்சம் மதிப்பில் 2,376 மிதிவண்டி களும், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை யினர் இனத்தைச் சேர்ந்த ஏழை, எளிய 68 மகளிருக்கு ரூ.3 லட்சத்து 76 ஆயிரம் மதிப்பில் தையல் இயந்திரம் போன்ற பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரி விக்கப்பட்டுள்ளது.
மே தினத்தன்று கிராம சபை
ஈரோடு, ஏப்.27- ஈரோடு மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் தொழிலாளர் தினத் தன்று முற்பகல் 11மணியளவில் கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற உள்ளன. இக்கூட்டங்களில், கிராம ஊராட்சி நிர் வாகம் மற்றும் பொதுநிதி செலவினம் அறிக்கை குறித்து விவாதித்தல், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை பார்வைக்கு வைத்து ஒப்புதல் பெறுதல், சுத்த மான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்வது குறித்து விவாதித்தல், கிராம ஊராட்சி திட்டம் நடத்தப்படுதல், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் குறித்து விவாதித்தல், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணிகள் குறித்து விவா தித்தல் மற்றும் இத்திட்டத்தில் வேலை அட்டைகள் வழங்கியதை உறுதி செய்தல் ஆகியவை நடைபெறும். திறந்த வெளியில் மலம் கழித்தலற்ற நிலையை தக்க வைத்தல், திடக்கழிவு மேலாண்மை நடவடிக்கைகள், நெகிழிக்கு மாற்று பொருள்கள் பயன்படுத்துவதை ஊக்குவித்தல், நெகிழி கழிவு மேலாண்மை நடவடிக்கைகள், திரவ கழிவு மேலாண்மை நடவடிக்கைகள் மற்றும் இதர பொருட்கள் உள்ளிட்ட கூட்டப்பொருட்கள் விவாதிக்கப் படும் என மாவட்ட நிர்வாகத்தின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறைதீர் கூட்டம்
தருமபுரி, ஏப்.27- தருமபுரி மாவட்ட விவ சாயிகள் குறைதீா்க்கும் கூட்டம் வெள்ளியன்று நடை பெற உள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறி யிருப்பதாவது, தருமபுரி மாவட்ட விவசாயிகள் குறை தீா்க்கும் நாள் கூட்டம் வெள்ளியன்று (இன்று) காலை 11 மணியளவில் ஆட் சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் நடைபெற உள்ளது என தெரிவித்துள்ளார். தருமபுரி மாவட் டத்தில் தொடர்ந்து வன விலங்குகளால் மனித உயிர்கள் பலியாவதும், விவசாய பயிர்கள் சேதமாகி வருவதும், விவசாயிகளிடைய பெரும் அச்சத்தை ஏற்படுத்துள்ள நிலையில், இந்த குறை தீர்க்கூட்டத்தில் விவசாயிகள் கேள்வி எழுப்புவார்கள் என தெரிய வருகிறது.
காட்டு யாகைள் தாக்கியதில் முதியவர் பலி
தருமபுரி, ஏப்.27- காரிமங்கலம் அருகே இரண்டு காட்டு யானைகள் தாக்கி யதில், முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு மாதத்திற்கு மேலாக சுற்றி திரியும் யானைகளால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் அச்சமடைந்துள்ளது. தருமபுரி மாவட்டம், பாலக்கோடு, மாரண்டஅள்ளி, பஞ்சப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த மூன்று மாதங் களாக யானைகள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. சமீபத்தில் மூன்று காட்டு யானைகள் மின்சாரம் தாக்கி உயிர் இழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந் நிலையில், கடந்த இரண்டு மாதங்களாக மீண்டும் காட்டி லிருந்து இரண்டு ஆண் யானைகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி பாலக்கோடு, காரிமங்கலம், காவேரிப் பட்டணம், போச்சம்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் சுற்றி வரு கிறது. வியாழனன்று கரிமங்கலம் பகுதியில் முகாமிட்டுள்ள இரண்டு காட்டு யானைகள், பெரிய மொரசப்பட்டி கிரா மத்தை சேர்ந்த வேடி (70) என்பவர் இயற்கை உபாதை கழிக்க வெளியே சென்றுள்ளார். அப்பொழுது அந்த வழியாக வந்த காட்டு யானைகள் முதியவரை தாக்கியுள்ளது. இதில், படுகாயமடைந்து வேடி சம்பவ இடத்திலேயே பரிதாமபாக உயிரிழந்துள்ளார். தொடர்ந்து நீண்ட நேரம் ஆன பிறகு முதியவர் இறந்து தெரியவந்தது. தொடர்ந்து பாலக்கோடு வனத் துறையினர் யானைகளை கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் காரிமங்கலம் காவல் துறையினர் வேடி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இந்த இரண்டு காட்டு யானைகள் தாக்கி யதில் இதுவரை மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். ஒரு பெண் காயமடைந்துள்ளார். தொடர்ந்து இரண்டு மாதமாக இரண்டு காட்டு யானைகளும் வனப் பகுதிக்குள் செல்லாமல், பாலக் கோடு, காரிமங்கலம், காவேரிப்பட்டணம், போச்சம்பள்ளி பகுதியில் உள்ள கிராமப் புறங்களில் சுற்றி வருவதால் பொது மக்கள், விவசாயிகள் பெரும் அச்சமடைந்துள்ளனர்.
காலாவதியான உணவுகள் பறிமுதல்
சேலம், ஏப்.27- சேலம் அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள உணவ கத்தில் காலாவதியான பிரட், பாதம் கீர் பாக்கெட்டுகளை உணவு பாதுகாப்புத்துறையினர் பறிமுதல் செய்தனர். சேலம் அரசு மருத்துவமனை வளாகத்தில் ஆவின் பால கம் அமைந்துள்ளது. இங்கு காலாவதியான பொருட்கள் விற் பனை செய்யப்படுவதாக எழுந்த புகாரின் பேரில், மாவட்ட நியமன அலுவலர் கதிரவன் தலைமையில், உணவு பாது காப்பு அலுவலர்கள் சுருளி ராஜா, சிவலிங்கம் ஆகியோர் அடங்கிய குழுவினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப் போது, தயாரிப்பு தேதி குறிப்பிடாத 60 பன் பாக்கெட்டுகள், முந்தைய தேதியிட்ட 16 பாக்கெட்டுகள், உரிய விபரங்கள் குறிப்பிடாத பாதாம் கீர் 200 மி.லி. கொண்ட 36 பாட்டில்கள் இருப் பது தெரியவந்தது. இதனை அதிகாரிகள் பறிமுதல் செய்த னர். மேலும், அங்கிருந்த தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்கள் மற்றும் பிரிண்ட் செய்யப்பட்ட செய்தித்தாள்களும் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப் பட்டது. தொடர்ந்து உணவகத்திலிருந்து ரூ.16 ஆயிரம் மதிப் பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மனித கழிவுகளை வைத்து மரபணு சோதனை வேங்கை வயல் குறித்து கொளத்தூர் மணி கருத்து
சேலம், ஏப்.27- அறிவியல் முன்னேற்றம் அடைந்துள்ள நிலையில், வேங்கை வயல் விவகாரத்தில், மனித கழிவுகளை வைத்து ஏன் மரபணு சோதனை மேற்கொள்ளக்கூடாது என திவிக தலைவர் கொளத்தூர் மணி கேள்வி எழுப்பி யுள்ளார் . தமிழ்நாட்டில் பாஜக எந்தெந்த வழிக ளில் காலூன்ற முயற்சிக்கிறது என்பது குறித்த இளம் தலைமுறைக்கான இரண்டு நாட்கள் பயிற்சி சேலத்தில் திராவிட விடுதலைக் கழ கம் சார்பில் நடைபெற உள்ளது. இதுகுறித்து, திவிக தலைவர் கொளத்தூர் மணி செய்தியா ளர்களிடம் பேசுகையில், திராவிட விடுதலைக் கழகம் சார்பில் இது தமிழ்நாடு, இளம் தலை முறையின் எச்சரிக்கை மாநாடு என்ற தலைப் பில் இரண்டு நாட்கள் மாநாடு சேலம் சீல நாயக்கன்பட்டியில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டா லின், நேரு உள்ளிட்டோர் பங்கேற்க உள்ள னர். தமிழ்நாட்டில் பாஜக, ஆர்எஸ்எஸ் காலூன்ற தீவிர முனைப்பு காட்டி வருகிறது. அதற்கு பதவியில் இல்லாத சிலர் துணை போகின்றனர். இதனை தடுக்கும் விதமாக இந்த மாநாடு நடத்தப்பட வேண்டியது அவசி யமாகிறது. ஆளுநர் ரவி, ஆர்எஸ்எஸ் கொள்கை களை முன்வைத்து, மாநில அரசுக்கு எதிராக பேசி வருகிறார். சட்ட மசோதாக்களை நிறுத்தி வைப்பது மறுப்பதாகவே பொருள்படும். ஆணவக்கொலைகளை தடுக்க அரசு தனி சட்டம் இயற்ற வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். வேங்கை வயல் விவகாரம் குறித்த செய்தியாளர்களின் கேள் விக்கு, எத்தனையோ அறிவியல் முன்னேற் றம் கண்டுள்ள போது ஏன் மனித கழிவுகளை வைத்து மரபணு சோதனை நடத்த முடியாது என்று கேள்வி எழுப்பினார்.
பந்தலூர்: புதிய சாலையால் மக்கள் மகிழ்ச்சி
உதகை, ஏப்.27- மண் சாலையால் பெரும் சிரமத்திற்குள் ளாகி வந்த பொதுமக்களுக்கு, புதிய சாலை அமைக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம், பந்தலூர் வட்டம், நெலாக்கோட்டை ஊராட்சி, சோலாடி பாண் டியன் காலனி பகுதியில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதிக்கு செல் லும் மக்கள் மண் சாலையை பயன்படுத்தி வந் தனர். மழைக்காலங்களில் மண் சாலை சேறும், சகதியுமாக மாறி, நடந்து செல்வதற்கு முடியா மல் சிரமப்பட்டு வந்தனர். இதனிடையே கூட லூர் ஊராட்சி ஒன்றியம், நெலாக்கோட்டை ஊராட்சி சார்பில் தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சிதுறை சார்பில் ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து, டெண்டர் விடப்பட்டு கான்கிரீட் சாலை அமைக்கப்பட்டு, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு புதனன்று திறக்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு நெலாக் கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் டெர்மிளா பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். நீண்ட காலமாக நடைபாதை இல்லாமல் சிரமப்பட்டு வந்த கிராமமக்கள், புதிய கான்கிரீட் சாலை அமைக்கப்பட்டதால் மகிழ்ச்சி அடைந்தனர்.
வெடி பொருட்களை வீசி மீன் பிடித்தால் நடவடிக்கை
ஆட்சியர் எச்சரிக்கை
ஆட்சியர் எச்சரிக்கை சேலம், ஏப்.26- சேலம் மாவட்டத்தில் நீர்நிலை களில் வெடி பொருட்களை பயன் படுத்தி மீன்பிடித்தால் கடும் நடவ டிக்கை எடுக்கப்படும் என்று ஆட்சி யர் செ.கார்மேகம் எச்சரிக்கை விடுத் துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பில் கூறியி ருப்பதாவது, மேட்டூர் அணை பகுதி யில் மீன்வளத்துறையின் மூலம் மீன வர்களுக்கு மீன்பிடி உரிமம் வழங் கப்பட்டு வருகிறது. உரிமம் பெற்ற வர்கள் அனுமதிக்கப்பட்ட இடங்கள் மற்றும் அனுமதிக்கப்பட்ட நேரங்க ளில் மீன்பிடித்து வருகின்றனர். வழி முறைகளை பின்பற்றாத மீனவர்கள் மீது நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டு மீன்பிடி உரிமம் ரத்து செய்யப் படும் என்று ஏற்கனவே அறிவுறுத் தப்பட்டுள்ளது. மாவட்டத்தில் மேட் டூர் அணை பகுதிகளை தவிர பிற பகு திகளான காவிரி ஆற்றங்கரை, சர பங்கா நதி உள்ளிட்ட பல்வேறு நீர் நிலை பகுதிகளில் மீனவர்கள் மற் றும் பொதுமக்கள் மீன்பிடித்து வரு கின்றனர். அவ்வாறு மீன்களை பிடிக்க தூண்டில், மீன் வலைகள் உள்ளிட்டவற்றை பயன்படுத்துகின் றனர். மேலும் நீர்நிலை பகுதிகளில் சிலர் சட்டத்திற்கு புறம்பான வகை யில் வெடிமருந்துகள் அடங்கிய பொருட்களை பயன்படுத்தி மீன் களை பிடிப்பதாக தகவல் வரப்பெறு கிறது. வெடி பொருட்களை பயன்ப டுத்தி மீன் பிடிப்பதால் எதிர்பாராத விபத்துகள் ஏற்பட்டு உயிர்சேதம் ஏற் பட வாய்ப்புள்ளது. எனவே மாவட்டத் தில் உள்ள ஏரிகள், குளங்கள் உள் ளிட்ட நீர்நிலைகளில் யாரேனும் சட் டத்திற்கு புறம்பான வகையில் வெடி பொருட்களையோ அல்லது தடை செய்யப்பட்ட மீன் வலைகளையோ பயன்படுத்தி மீன் பிடித்தால் அவர் கள் மீது போலீசார் மூலம் கடும் நடவ டிக்கை மேற்கொள்ளப்படும். மேலும், அனுமதியின்றி வெடி பொருட்களை விற்பனை செய்பவர்கள் சட்டத் திற்கு புறம்பான வகையில் மீன் பிடிப் பவர்கள் குறித்து மீன்வளத்துறை உதவி இயக்குநர் அல்லது ஆட்சி யர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறையின் தொலைபேசி எண்ணுக்கு அல்லது வருவாய்த்துறை அல்லது அருகிலுள்ள காவல் நிலையத்தில் பொதுமக்கள் புகாரளிக்கலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொழிலாளர்களின் கூலி உயர்வு: உற்பத்தியாளர்கள் பிடிவாதம்
பள்ளிபாளையம், ஏப்.27- பள்ளிபாளையத்தில் விசைத் தறி தொழிலாளர்கள் கூலி உயர்வு பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. உற்பத்தியாளர் களின் தொடர் பிடிவாதத்தால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. நாமக்கல் மாவட்டம், பள்ளி பாளையம் சுற்றுவட்டார பகுதி களில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிகள் இயங்கி வரு கின்றன. இந்த தொழிலை நம்பி நேரடியாகவும், மறைமுகமாகவும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் பணியாற்றி வரு கின்றனர். இந்நிலையில், இரண்டு ஆண்டு களுக்கு ஒரு முறை விசைத்தறி தொழிலாளர்களுக்கு புதிய கூலி உயர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தப்படு வது வழக்கம். தற்போது ஒப்பந்த காலம் முடிந்து இரண்டு ஆண்டு களுக்கு மேலாகிவிட்டது. கடந்த புதனன்று பள்ளிபாளையம், தேவாங்கபுரம் கன்னிமார் திருமண மண்டபத்தில் கூலி உயர்வு பேச்சு வார்த்தை நடைபெற்றது. இதில், விசைத்தறி தொழிற் சங்கங்கள் சார்பில் ஒன்பது அம்ச கோரிக்கைகளுடன் 25 சதவிகித கூலி உயர்வு கேட்கப்பட்டது. ஆனால், விசைத்தறி ஜவுளி உற் பத்தியாளர்கள் ஐந்து சதவிகிதம் மட்டும்தான் தரமுடியும் என உற்பத்தியாளர்கள் தொடர் பிடிவா தமாக இருப்பதால், பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்தது. இதையடுத்து, வரும் மே 3 ஆம் தேதியன்று பேச்சுவார்த்தை நடைபெறும் என தொழிற்சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.
தகிக்கும் வெப்பம்: இயற்கை உணவுகள் விற்பனை அமோகம்
தருமபுரி, ஏப்.27- தமிழ்நாட்டில் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து வரும் நிலையில், தருமபுரியில் கோடை வெப்பத்தை தணிக்க இயற்கையான நுங்கு, தர்பூசணி, ராகிக்கூழ் மற்றும் பழச்சாறு கடைகளில் மக்கள் கூட்டம் குவிந்து வருகிறது. தருமபுரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக நாளுக்கு நாள் கோடை வெப்பம் பொதுமக்களை வாட்டி வதைத்து வரு கிறது. வெயிலின் தாக்கத்தால் பொதுமக்கள் வெளியே வரா மல் வீட்டிலேயே முடங்கி போயி உள்ளனர். மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெப்பத்தின் அளவு 100 டிகிரியை தாண்டியுள்ளது. ஆட்டோ, பேருந்துகளைத் தவிர சில பகுதி களுக்கு பொதுமக்கள் நடந்தே செல்வதால், வேர்த்து விறு விறுக்க சோர்ந்து போய் நீர்சத்து குறைந்து போகும் நிலைக்கு பொது மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். இதனால் நுங்கு, தர் பூசணி, இளநீர், முலாம்பழம், பப்பாளி உள்ளிட்ட பழவகை களை தேடி சென்று வாங்கி செல்கின்றனர்.
ஏர் ஹாரன் பயன்படுத்தினால் அபராதம்
சேலம், ஏப்.27- பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் காற்று ஒலிப்பான் (ஏா் ஹாரன்) பயன்படுத்தினால் ரூ.10 ஆயி ரம் அபராதம் விதிக்கப்படும் என சேலம் ஆட்சியர் செ.கார் மேகம் எச்சரிக்கை விடுத்துள்ளார். சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், சாலை பாது காப்பு குறித்த மாதாந்திர ஆய்வுக்கூட்டம் புதனன்று நடை பெற்றது. இக்கூட்டத்தில் ஆட்சியர் செ.கார்மேகம் பேசுகை யில், சேலம் மாநகர பகுதிகளில் கடந்த 2023 ஜனவரி முதல் மார்ச் வரையிலான 3 மாதங்களில் மட்டும் சேலம் மாவட்டத் தில் மொத்தம் ஒரு லட்சத்து 29 ஆயிரத்து 664 நபர்கள் மீது வழக்குகள் பதியப்பட்டுள்ளன. மேலும், மாவட்டத்தில் கடந்த 3 மாதங்களில் வாகன உயிரி ழப்பு விபத்துகளை ஏற்படுத்தியவர்கள், சாலை விதிகளை கடைப்பிடிக்காதவர்கள் மீது மாவட்ட வட்டார போக்குவரத்து அலுவலர்களால் மட்டும் ஆயிரத்து 135 ஓட்டுநர் உரிமங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. அதேபோல, பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் காற்று ஒலிப்பான் பயன் படுத்தினால் விதிமுறைகளின்படி ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. அந்த வகையில், கடந்த 3 மாதங்களில் விதி களை மீறி காற்று ஒலிப்பான் பயன்படுத்திய 117 நபர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கோடைக் காலத்தைக் கருத் தில்கொண்டு, சாலை பணிகள் நடைபெறும் போது, குடிநீர் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டால் உடனடியாக சரி செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது, என்றார். இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரா.சிவ குமார், மாவட்ட வருவாய் அலுவலர் பெ.மேனகா, மாநகர காவல் துணை ஆணையர் எஸ்.பி.லாவண்யா, மாவட்ட ஆட்சி யரின் நேர்முக உதவியாளர் (பொது) எம்.ஜெகநாதன், வட்டார போக்குவரத்து அலுவலர்கள் ராஜராஜன், சுப்பி ரமணியன், பாஸ்கர், கல்யாணக்குமார் உட்பட அரசுத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.