districts

img

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நாளை மாநிலந்தழுவிய மறியல் போர்

ஒன்றிய அரசுப்பணிகளில் காலியாக உள்ள 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பணி யிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. ஆண்டிற்கு இரண்டு கோடி பேருக்கு வேலை  தருவோம் என்ற மோடியின் வாக்குறுதி, தேர் தல் ஜூம்லாவாக உள்ளது. புதிய வேலை வாய்ப்பை உருவாக்கவில்லை என்பது மட்டு மல்ல, மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசு இருக்கிற வேலையையும் பறித்து வருகி றது. இதற்கு கண்முன் உதாரணமாக தேசிய பஞ்சாலைக்கழகத்திற்கு சொந்தமான என்டிசி ஆலைகள் தமிழகத்தில் மூடப்பட்டு மூன்று  ஆண்டுகள் கடந்தும் இன்று வரை திறக்கப்பட வில்லை. இந்த பஞ்சாலைகளில் பணியாற்றிய ஆயிரக்கணக்கான ஊழியர்களை நடுத்தெரு வில் நிறுத்தியுள்ளது மோடி அரசு. விவசாயத்திற்கு அடுத்தபடியாக அதிக வேலைவாய்ப்பை அளிக்கும் துறையாக ஜவுளித் துறை உள்ளது. குஜாராத்தில் ஆமதாபாத், மராட் டியத்தில் மும்பை, தமிழ்நாட்டில் கோவை, திருப் பூர், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் ஜவுளித் துறை யில் மிக முக்கிய பங்காற்றி வருகிறது.  கோவை போன்ற நகரங்களில் ஆயிரக்கணக் கான ஸ்பின்டல்களுடன் இரவும், பகலுமாய் பல் லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணி யாற்றி வந்த பஞ்சாலைகள், தொழிலாளர்க ளுக்கு உரிமைகள் வழங்க வேண்டும் என்பதற் காகவே ஸ்பின்டல்களின் எண்ணிக்கையை குறைத்து சிறு, சிறு யூனிட்டுகளாக திட்டமிட்டு பிரிக்கப்பட்டது. ஒரே ஆலையில் நூற்றுக்கணக் கானோர் பணியாற்றிய இடங்களில் இருந்து சில பத்து பேர் இயங்கும் இடமாக மாற்றப்பட்டது.  இது தனியார் பஞ்சாலை முதலாளிகளின் தந்தி ரம் என்றால், மறுபுறம் நன்றாக இயங்கிக் கொண்டிருந்த இந்திய ஜவுளித்துறைக்கு சொந்தமான என்டிசி ஆலைகளை எவ்வித காரணமுமின்றி ஒன்றிய மோடி அரசு மூடியுள் ளது.

நேஷனல் டெக்ஸ்டைல் கார்ப்பரேசன் லிமி டெட் (என்டிசி) ஜவுளி அமைச்சகத்தின் கீழ் உள்ள  ஒன்றிய பொதுத்துறை நிறுவனமாகும், 1968ல் என்டிசி உருவாக்கப்பட்டது. 1974 ஆம் ஆண்டு நாடு  முழுவதும் 123 பஞ்சாலைகள் தேசியமயமாக்கப் பட்டன. இதனிடையே என்டிசி வசம் இருந்த ஆலைகளில் 100 பஞ்சாலைகள் நஷ்டம் காரண மாக மூடப்பட்டுவிட்டன. அதன் பின்பு 23 பஞ் சாலைகள் மட்டுமே செயல்பாட்டில் உள்ளன. இவற்றில் தென்னிந்தியாவில் மட்டும் 15 பஞ் சாலைகள் இயங்குகின்றன. இதில் தமிழகத்தில் 7 பஞ்சாலைகள் இயங்குகின்றன. அதில் கோவை மாவட்டத்தில் பங்கஜா மில்ஸ், கம்போடியா மில்ஸ், கோயம்புத்தூர் ஸ்பின்னிங் அண்டு வீவிங் மில்ஸ், ஸ்ரீரங்கவிலாஸ் மில்ஸ், முருகன் மில்ஸ் என 5 பஞ்சாலைகள் செயல்படுகின்றன. காளையார்கோயிலில் காளீஸ்வரா, கமுதியில் பயனீர் ஸ்பின்னர்ஸ் ஆகிய பஞ்சாலைகள் தமி ழகத்தில் செயல்படுகிறது. என்டிசி பஞ்சாலைகளுக்கு சொந்தமாக ரூ.50 ஆயிரம் கோடிக்கு மேல் சொத்துக்கள் உள்ளன. இவை அனைத்தும் தொழிலாளர்களின் உழைப் பினால் உருவானவை. ரூ.10 கோடி மூலதனம் மதிப்பில் தான் பஞ்சாலைகள் செயல்பட்டன. அதன் வளர்ச்சி மூலம் தற்போது ரூ. 50 ஆயிரம் கோடி வரை வளர்ந்துள்ளது. தினமும் 2.5 லட்சம் நூல் உற்பத்தி செய்து வந்த இந்த என்டிசி ஆலை கள் ஒன்றிய அரசின் கார்ப்ரேட் நலக்கொள்கை களால் கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதை யாக மாறியது. 

இந்நிலையில், கொரோனா பெருந்தொற்றை ஒன்றிய மோடி அரசு தனக்கு சாதகமாக எடுத் துக்கொண்டது. கொரோனா தொற்றின் ஊர டங்கு காலத்தை பயன்படுத்தி என்டிசி  பஞ்சாலை கள் மூடப்பட்டன. ஊரடங்கு காலம் முடிந்து இயல்பு நிலைக்கு திரும்பி மூன்றாண்டு காலம் ஆன பின்னும் இன்றுவரை திறக்கப்படவே யில்லை.  மூடப்பட்ட என்டிசி பஞ்சாலைகளை திறக்க  கோரி தொழிலாளர்களும், தொழிற்சங்கத்தின ரும் தொடர் போராட்டத்தை முன்னெடுத்து வரு கின்றனர். என்டிசி நிர்வாகம், ஜவுளி அமைச்ச கம், ஒன்றி ஜவுளித்துறை அமைச்சர், ஒன்றிய  நிதி அமைச்சர் என தொடர்ந்து மனு அளித்தும், தமிழகத்தின் மேற்கு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றினைந்து ஜவுளித்துறை அமைச்சரை சந்தித்து என்டிசி பஞ்சாலை இயங்க வேண்டிய அவசியம் குறித்தும், இதனை நம்பி யுள்ள தொழிலாளர்கள் நலன் குறித்தும் கோரிக்கை விடுத்தும், அசையாத அரசாக ஒன்றிய மோடி அரசு உள்ளது.  மீண்டும் பஞ்சாலைகள் திறக்கப் படுமா? என்கிற கேள்விக்கு விடையில்லா மல் தொழிலாளர்கள் தவித்து வருகின்ற னர். ஒன்றிய அரசின் அலட்சியத்தால் பங் சாலைகளில் வேலைவாய்ப்பு உருவாக்கா மல் பல ஆயிரம் தொழிலாளர்களுக்கு புதி யதாக வேலை வாய்ப்பு வழங்கப்பட வில்லை. தற்போது வேலையில் இருக்கும் 4  ஆயிரம் தொழிலாளர்களுக்கும் வேலை  வழங்காமல் பஞ்சாலைகள் மூடப்பட்டுள் ளன.

ஒன்றிய அமைச்சரின் உருட்டு

இந்நிலையில், கடந்த இரண்டு தினங்க ளுக்கு முன்பு கோவை வந்த ஒன்றிய ஜவு ளித்துறை அமைச்சர் பியூஸ் கோயல் மற் றும் இணை அமைச்சர் தர்ஷணா விக்ரம் ஜர்தோஷ் ஆகியோர் 11ஆவது ஆசிய ஜவுளி மாநாடு மற்றும் சைமா 90 ஆம் ஆண்டு  விழாவில் பேசுகையில், ஜவுளித்துறையை ஆராய்ச்சி மூலம் தரம், நிலைப்பு தன்மையை மேம்படுத்த முடியும். ஜவுளித்துறை இந்திய பொருளாதாரத்தில் 8 சதவீதம் ஏற்றுமதி செய்கிறது. ஜவுளித்துறையில் உள்ள  அனைவரும் இணைந்து செயற்படுவதன் மூலம் ஜவுளித்துறையை முன்னேற்ற முடி யும் என உருட்டிலும் பெரிய உருட்டு இது தான் என்கிற வகையில் உருட்டி தள்ளி யுள்ளார்.  இதனிடையே என்டிசி பஞ்சாலைகளை இயக்க வேண்டும் என கோவை நாடாளு மன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் தலை மையில் அனைத்து தொழிற்சங்க பிரதி நிதிகள் இந்த அமைச்சரை சந்தித்து மனு  அளித்தனர். அப்போது, என்டிசி பஞ்சாலை களை இயக்குவது குறித்து ஆராய ஒரு குழு அமைத்துள்ளோம். அதன் அறிக்கை வந்த  பிறகு முடிவெடுக்கப்படும் என தெரிவித் துள்ளார். இந்த ஒன்றிய அமைச்சர் பியூஸ் கோயல்தான், கடந்த இரண்டு ஆண்டுக ளுக்கு முன்பு, மேற்கண்ட வார்த்தையின்  அச்சாரம் பிசகாமல் மேற்கு மாவட்ட நாடா ளுமன்ற உறுப்பினர்களிடம், தொழிற் சங்க தலைவர்களிடம் வாயளந்தார். மீண் டும் அதையே அளக்கிறார். ஒன்றிய மோடி  அரசின் இந்த தொழிலாளர் விரோத நடவ டிக்கையின் விளைவாக பல நூற்றுக் கணக்கான தொழிலாளர்கள் நிரந்திர வேலையை பறிகொடுத்துக்கொண்டு தெருவில் நின்று முழக்கங்களை எழுப்பிக் கொண்டிருக்கிறார்கள். வேலை கொடு என் கிற இவர்களின் முழக்கங்களுக்கு ஆதர வாகவே மார்க்சிஸ்ட் கட்சி செப்டம்பர் 7  மறியல் களம் காண்கிறது.