districts

திண்டல் உயர்மட்ட பாலம் திட்டத்தை விரைந்து செயல்படுத்துக

ஈரோடு, டிச.10- ஈரோடு - பெருந்துறை சாலை யில் கடும் போக்குவரத்து நெரிசல்  ஏற்பட்டு வருவதால், திண்டல் உயர்மட்ட பாலம் அமைக்கும் திட் டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. ஈரோடு நகரின் பிரதான சாலை யாக பெருந்துறை சாலை உள்ளது.  ஈரோட்டில் இருந்து கோவை, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள் இந்த சாலை வழியாகத்தான் செல்ல வேண்டும். மேலும், இச்சாலையில் பெருந்துறை வரை 20க்கும் மேற் பட்ட கல்வி நிறுவனங்கள் உள் ளன. இதனால், இந்த சாலையில்  எப்போதும் வாகனப் போக்குவ ரத்து அதிகளவில் காணப்படும். இச்சாலையின் தொடக்கமாக உள்ள ஈரோடு அரசு மருத்துவ மனை சந்திப்புப் பகுதியில் ஏற்ப டும் போக்குவரத்து நெரிசலைத் தீர்க்க, கடந்த ஆட்சியில் ரூ.58  கோடி செலவில் மேம்பாலம் கட் டப்பட்டது. இப்பகுதியில் போக்கு வரத்து நெரிசல் குறைந்தாலும், அரசு மருத்துவமனயில் இருந்து திண்டல் வரை போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது. இப்பி ரச்னைக்கு தீர்வு காணும் வகை யில் கடந்த அதிமுக ஆட்சியில், காலிங்கராயன் அரசு விருந்தினர் மாளிகையில் தொடங்கி திண்டல் வரை 5.5 கி.மீ. தொலைவுக்கு உயர்மட்ட மேம்பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. ரூ.300 கோடி மதிப்பீட்டில் பாலம் அமைக்க அரசின் அனுமதியும் கோரப்பட்டது. அரசு மருத்துவமனை அருகே அமைக்கப்பட்ட மேம்பாலம் திறப்பு விழா நிகழ்வில் பங்கேற்ற அப்போதைய முதல்வர் எடப் பாடி கே.பழனிசாமி திண்டல் வரை  உயர்மட்ட மேம்பாலம் அமைக்கப் படும் என்று உறுதியளித்தார். இதற்காக மண் பரிசோதனை போன்ற ஆரம்பகட்டப் பணிக ளும் நடைபெற்றன. ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும், மாவட்டத் தில் செயல்படுத்தப்பட உள்ள  திட்டங்கள் பட்டியலில் திண்டல்  உயர்மட்ட மேம்பாலத் திட்டம் இடம் பெறவில்லை. இந்நிலையில், திண்டல் உயர்மட்ட மேம்பாலம் கட்டுவது அவசியமா என்பது குறித்து ஆய்வு நடத்தப்படும் என்றும், இந்த பாலம் கட்டப்பட் டாலும், கல்லூரி மற்றும் பள்ளி  வாகனங்கள் மட்டுமே மேம்பாலத் தில் செல்லும், பேருந்து உள்ளிட்ட  இதர வாகனங்கள் பெருந்துறை சாலையைப் பயன்படுத்தும் என்ப தால், போக்குவரத்து நெரிசலுக்கு தீா்வு ஏற்படாது என்றும் அமைச்சர் சு.முத்துசாமி கடந்தாண்டு தெரி வித்தார்.

அமைச்சரின் இந்த அறி விப்பிற்குப் பிறகு திண்டல் உயர் மட்ட மேம்பாலம் திட்டப் பணிகள் முழுமையாக முடங்கியுள்ளன. இதுகுறித்து அப்பகுதி பொது மக்கள் கூறுகையில், அரசு மருத் துவனையில் தொடங்கும் பெருந் துறை சாலையில் மருத்துவம னைகள், ஆட்சியர் அலுவலகம், பள்ளி, கல்லூரிகள், திருமண மண்டபங்கள் அமைந்துள்ளன. இதனால், இந்த சாலை போக்குவ ரத்து நெரிசல் மிகுந்து காணப்படுகி றது. குறிப்பாக பழையபாளையம் சிக்னல், குமலன் குட்டை சந்திப்பு, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ஆகிய இடங்களில் ரவுண்டானா மற்றும் மேம்பாலத்தின் தேவை ஏற்பட்டுள்ளது. இந்த சாலையில் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பிற்கு ஏற்ப, சாலை விரி வாக்கம் செய்யப்படாததால், விபத்துகள் அதிகரித்து வருகின் றன. இப்பிரச்னைக்குத் தீர்வு காண கடந்த ஆட்சியில் அறிவிக்கப் பட்ட உயர்மட்ட பாலம் அமைக்கும்  திட்டத்தை செயல்படுத்த வேண் டும். இதன்மூலம் போக்குவரத்து நெரிசல் குறையும். கோவை, திருப்பூரில் இருந்து வரும் அரசுப் பேருந்துகளுக்கு திண்டலுக்கு அடுத்ததாக ஆட்சியர் அலுவலகத் தில் தான் நிறுத்தம் உள்ளது. ஆட்சியர் அலுவலக பேருந்து நிறுத்தத்தை சற்று மாற்றி அமைத் தால் அனைத்துப் பேருந்துகளும் மேம்பாலத்தை பயன்படுத்தும் வாய்ப்பு உள்ளது. எதிர்கால  போக்குவரத்துத் தேவைகளுக் கும் இந்தப் பாலம் பெரிதும் பயன் படும். எனவே, திண்டல் உயர்மட்ட பாலம் திட்டத்தை அரசு மீண்டும் பரிசீலனை செய்து செயல்படுத்தி போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வுகாண வேண்டும், என்றனர்.