திருப்பூர், ஏப்.23- அன்றைய இலக்கியங்கள் ஆனாலும், இன்றைய இலக்கியங்கள் ஆனாலும் வாழ் வின் சாரத்தை உணர்த்தக் கூடியவையாக உள்ளன. புத்தக வாசிப்பின் மூலம் இதை நாம் அறியலாம் என்று மதுக்கூர் ராமலிங் கம் கூறினார். 18ஆவது திருப்பூர் புத்தகத் திருவிழா வின் 9ஆம் நிகழ்வான வெள்ளிக்கிழமை வாழ்வின் சாரத்தைப் பெரிதும் தருவது அன் றைய இலக்கியங்களா? இன்றைய இலக் கியங்களா? என்பது குறித்து பட்டிமன்றம் நடைபெற்றது. இதில் நடுவராகப் பங்கேற்ற எழுத்தாளர் மதுக்கூர் ராமலிங்கம், இரு தரப்பினரின் வாதத்தைத் தொடர்ந்து இலக் கியங்கள் வாசிப்பது மிகவும் அவசியம். அவை வாழ்வின் சாரத்தை உணர்த்தக் கூடி யதாக உள்ளன. அக்கால இலக்கியமா, இக் கால இலக்கியமா என்று எக்கால இலக்கி யத்தைப் படித்தாலும் அதில் வாழ்வின் சாரத்தை உள்வாங்க முடியும். அதற்கு புத் தக வாசிப்பு மிகவும் அவசியம் என்றார். முன்னதாக அன்றைய இலக்கியங்களே என்ற தலைப்பில் முனைவர் ஜி.கருமுருகா னந்த ராஜன், கவிஞர் மகேஸ்வரி சற்குரு ஆகியோர் உரைநிகழ்த்தினர். அதேபோல் இன்றைய இலக்கியங்களே என்ற தலைப் பில் கவிஞர் ராஜ்குமார், கவிஞர் உமாம கேஸ்வரி ஆகியோர் உரை நிகழ்த்தினர். திரளானோர் இந்த பட்டிமன்றத்தை கண்டு களித்தனர். முன்னதாக இந்நிகழ்வுக்கு முத்தமிழ்ச் சங்கத் தலைவர் கே.பி.கே.செல்வராஜ் தலைமை வகித்தார். வரவேற்புக்குழு சார் பில் கே.ராஜேந்திரன் வரவேற்றார். நிகழ் வின் நிறைவாக ஆசிரியர் ஆர்.பாலசுப்பிர மணியன் நன்றி கூறினார். இன்று நிறைவு பெறுகிறது கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி தொடங்கிய புத்தகத் திருவிழா கடந்த 10 நாட்களாக மிகச் சிறப்பான முறையில் நடைபெற்று வந்தது. பார்வையாளர்கள் ஏராளமானோர் வந்து புத்தகங்களை வாங்கிச் சென்றனர். பள்ளிக் குழந்தைகளும் அழைத்து வரப்பட்டு புத்தக கண்காட்சியை கண்டு களித்தனர். ஏப்ரல் 24 ஆம் தேதி (ஞாயிறன்று) புத் தகத் திருவிழா நிறைவு பெறுகிறது. நிறைவு தின நிகழ்ச்சியாக வெற்றித் தமிழர் பேரவை சார்பில் சொல்லின் செல்வர் பி.மணி கண்டன் நடுவராக இருக்க மக்களைப் பெரி தும் ஈர்ப்பது கதைகளா, கவிதைகளா என்ற தலைப்பில் சிறப்புப் பட்டிமன்றம் நடை பெறுகிறது. கதைகளே என்ற தலைப்பில் சுசித்ரா, இராஜபாளையம் உமாசங்கர் ஆகியோரும், கவிதைகளே என்ற தலைப் பில் பேராசிரியர் குருஞானாம்பிகை, தாமல் சரவணன் ஆகியோரும் பங்கேற்று வாதி டுகின்றனர்.