districts

img

இயற்கையை பாதுகாக்காவிட்டால் பேரழிவுகளை தவிர்க்க முடியாது உயர்நீதிமன்ற நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி பேச்சு

உதகை, மே 31- இயற்கையை பாதுகாக்காவிட் டால் பேரழிவுகளை தவிர்க்க முடி யாது என உதகையில் நடைபெற்ற வனத்துறை அதிகாரிகள் மாநாட் டில் உயர்நீதிமன்ற நீதிபதி முனீஸ் வர் நாத் பண்டாரி தெரிவித்தார். உதகை விருந்தினர் மாளிகை யில் வனத்துறை அதிகாரிகள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட் டில் வனத்துறை தலைமை முதன்மை வனப்பாதுகாவலர் சையது முஸமில் அப்பாஸ் வரவேற் றார். இதைத்தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி மாநாட்டை தொடங்கி வைத்து பேசியதாவது, வனத்தை அழித்தால் நாமும் அழிந்து விடுவோம். வனங்களை பாதுகாக்கவே நீதித்துறை உத்தரவு களை பிறப்பிக்கிறது. எனவே, சுற் றுச்சூழலை பாதுகாக்க இந்த இரு துறைகளும் இணைந்து செய லாற்ற வேண்டும். மக்களிடம் சுற்றுச் சூழல் குறித்து விழிப்புணர்வு ஏற்ப டுத்த வேண்டும்.  இந்தியாவில், அதிக வனப்ப ரப்பை கொண்ட பகுதிகளில் தமிழ கம் 2 ஆவது இடத்தில் உள்ளது. வனங்களில் களை செடிகள், அந் நிய தாவரங்கள், பாட்டில்கள் ஆகிய வற்றை அகற்ற மனித ஆற்றல் மற் றும் நிதி தேவைப்படுகிறது. இயற் கையை பாதுகாக்காவிட்டால் பேர ழிவுகளை தவிர்க்க முடியாது. எனவே, சுற்றுச்சூழலை பாதுகாப்ப தில் அரசு முனைப்புடன் இருக்கி றது. இவ்வாறு அவர் பேசினார்.  இந்நிகழ்வில், நீதிபதிகள் பவானி, என்.சதீஸ்குமார், வனத் துறை செயலாளர் சுப்ரியா சாஹூ மற்றும் வனத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர். முடிவில், தமிழக அர சின் கூடுதல் வழக்கறிஞர் ஜெனரல் ரவீந்திரன் நன்றி கூறினார்.