திருப்பூர், மார்ச் 18 - திருப்பூர் மாநகராட்சி தேர்த லில் 8 வார்டுகளில் போட்டியிட்டு 7 வார்டுகளில் எதிர்பாராத வகை யில் தோற்கடிக்கப்பட்டாலும், மக்கள் பிரச்சனையில் முன்களத் தில் நின்று போராடுவோம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ் கூறினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கேத்தம்பாளையம் தியாகி ஆர்.பன்னீர்செல்வத்தின் 24ஆம் ஆண்டு நினைவு தினப் பொதுக்கூட்டம் வியாழக்கிழமை பிச்சம்பாளையம் புதூர் சாலை யில் நடைபெற்றது. இக்கூட்டத் தில் கே.காமராஜ் பேசுகையில், வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்து ஓட்டு வாங்குவது சரி யில்லை என கருதுகிறோம். அதி முகவின் மேயர் வேட்பாளர் என சொல்லப்பட்டவர் அவரது கட்சி தலைமைக்கு ரூ.15 கோடி கொடுத்து சீட் வாங்கியதாகவும், வார்டுக்கு அதில் ரூ.25 லட்சம் பிரித்துக் கொடுத்ததாகவும் நாளி தழில் செய்தி வந்தது. இவ்வ ளவு தொகை செலவு செய்துதான் மக்கள் சேவை செய்ய வேண் டுமா?
ஒருவர் தேர்தலில் முதலீடு செய்து வெற்றி பெற்று வந்தால் அதை பல மடங்காக சம்பாதிக்க முயற்சி செய்வார். மக்கள் நலத் திட்டங்களுக்கு உரிய பணம் முழுவதும் மடை மாற்றம் செய் யப்படும். மக்களுக்கு சிறு தொகை கொடுத்துவிட்டு பெருந்தொ கையை கொள்ளையடிக்கும் நிலைதான் ஏற்படும். ஆனால், மார்க்சிஸ்ட் கட்சி யில் மக்கள் பிரதிநிதிகளாக செயல்பட்ட பாலபாரதி, கே.தங்க வேல் போன்ற யாரும் தங்கள் சொந்த காசில் ஒரு பைசா கூட தேர்தல் செலவு செய்ததில்லை. ரூ.1லட்சம் ரூ.50 ஆயிரம் என தரப்படும் எம்எல்ஏ ஊதியம், ஓய் வூதியத்தைகூட கட்சிக்கு அளித்து விட்டு கட்சி அளிக்கும் சம்ப ளத்தை அவர்கள் பெற்றுக் கொள் வார்கள். எம்எல்ஏக்கள் மட்டு மல்ல, முதலமைச்சராக இருக் கும் பினராயி விஜயனும், முன் னாள் முதலமைச்சர் ஜோதி பாசுவும் கூட தங்களுக்கு அரசு தரும் சம்பளத்தை கட்சிக்கு கொடுத்துவிட்டு, கட்சி கொடுக் கும் ஊதியத்தில்தான் வாழ்க் கையை நடத்தி வருகிறார்கள். திருப்பூர் மாநகராட்சி தேர்த லில் மார்க்சிஸ்ட் கட்சி வேட்பா ளர்களாக 8 வார்டுகளில் போட்டி யிட்டவர்கள் ஒரு பைசா காசு கூட சொந்த பணம் செலவிடவில்லை. காசு கொடுத்து வாக்கு வாங்கக் கூடாது என செயல்பட்டோம். ஆனால், எதிர்பாராத வகையில் 7 பேர் தோற்கடிக்கப்பட்டனர்.
இருந்தாலும் மக்கள் பிரச்சனை யில் முன்களத்தில் நிற்போம். கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் சிபிஎம்-க்கு ஒரேயொரு மாமன்ற உறுப்பினர் இருந்தார். அதிமுக வுக்கு மிகப்பெரும் பலம் இருந் தது. குடிநீர் கட்டணத்தை கடு மையாக உயர்த்தினர். சிபிஎம் மாமன்ற உறுப்பினர் எதிர்த்த போது, உங்களால் என்னசெய்ய முடியும், நாங்கள் பெரும்பான்மை பலம் இருப்பதால் கட்டணத்தை உயர்த்துவோம் என்று அதிமுக நிர்வாகத்தினர் சொன்னார்கள். மாமன்றத்தில் எதிர்ப்புக் குரல் கொடுத்ததுடன், வெளியேயும் மக்களைத் திரட்டி போராடினோம். மற்ற கட்சிகளும் போராடிய நிலையில் குடிநீர் கட்டண உயர்வு கைவிடப்பட்டது. மக் கள் பிரச்சனைகளுக்காக தொடர்ந்து போராடக்கூடிய மார்க் சிஸ்ட் கட்சிக்கு மக்கள் ஆதரவ ளிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.