அகில இந்திய சமாதான ஒருமைபாட்டுக் கழகம் சார்பில் அண்ணல் காந்தியடிகளின் 150ஆவது ஆண்டு நிறைவையொட்டி சிறப்புக் கருத்தரங்கம் சென்னையில் சனிக்கிழமை (நவ. 9) நடைபெற்றது. காங்கிரஸ் மூத்த தலைவர் உ.பலராமன் தலைமை தாங்கினார். ஒருமைப்பாட்டு கழக பொதுச் செயலாளர் ஆறுமுகநயினார் வரவேற்றார். இதில் ஏஐடியுசி தேசியச் செயலாளர் வகிதா நிஜாம், தமிழ்நாடு வங்கி ஊழியர் சம்மேளன துணைத் தலைவர் கே.தாமரைச்செல்வன், வன்னி அரசு (விசிக) ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். பொதுச் செயலாளர் வீ.ராஜமோகன் நன்றி கூறினார்.