கோவை, ஜூன் 29- பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் வட மாநில தொழிலாளர்களும் கலந்து கொண்டனர். இஸ்லாமியர்களின் தியாகத் திருநாளாக கருதப்படுவது பக்ரீத் பண்டிகையாகும். இப்பண்டிகை வியாழனன்று கொண்டாடப்பட்டன. இந்நிலையில், பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, கோவையில் பல்வேறு பள்ளிவாசல்களில் இஸ்லாமியர்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பு தொழுகை மேற்கொண்டனர். சிறப்பு தொழுகையில் ஈடுபட்ட அவர்கள் புத்தாடை அணிந்து தொழுகை மேற்கொண்டனர். பின்னர் ஒருவருக்கொருவர் பக்ரீத் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர். இதோபோல் பூ மார்க்கெட் பகுதியில் உள்ள திப்பு சுல் தான் தக்னி ஜமாத் பள்ளிவாசலில் தமிழ்நாட்டை சேர்ந்த வர்கள் மட்டுமல்லாமல் பல்வேறு வடமாநில தொழிலா ளர்களும் பக்ரீத் சிறப்பு தொழுகை மேற்கொண்டனர். மேலும், இப்பள்ளிவாசலில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு தொழுகை செய்பவர்களுக்கான தொப்பி, அத்தர், கண் சுருமா ஆகியவை விற்பனை செய்யப்பட்டது. இதனை வடமாநில தொழிலாளர்கள் வாங்கிச் சென்றனர்.