districts

img

சாதி ஆணவ படுகொலைகளை தடுக்க சிறப்பு சட்டம்

கோவை, ஜூன் 1- சாதி ஆணவ படுகொலைகளை  தடுக்க சிறப்பு சட்டம் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி கோவை யில் புதனன்று தமிழ்நாடு தீண் டாமை ஒழிப்பு முன்னணியின் தலை மையில்  ஆர்ப்பாட்டம் நடைபெற் றது.  தமிழகத்தில் சாதி ஆணவ படு கொலைகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தருமபுரி இளவரசன் துவங்கி திருச்செங்கோடு கோகுல் ராஜ், உடுமலை சங்கர், மேட்டுப் பாளையம் வர்ஷினி பிரியா, கனக ராஜ், கிருஷ்ணகிரி சுவாதி, நந்திஸ் படுகொலைகள் என்கிற பட்டியல் நீளுகிறது. பொதுவெளிக்கு வந்த சம்பவங்கேளே இது என்கிறபோது கவனத்திற்கே வராமல் மறைக்கப் பட்ட சம்பவங்கள் பல உள்ளது என் பதே நிதர்சனமான உண்மை. தமிழ கம் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் நடைபெறும் இதுபோன்ற சாதி ஆணவப்படுகொலைகளை தடுக்க தனிச்சட்டங்களை மத்திய மாநில அரசுகள் இயற்ற வேண்டும் என்று தொடர்ந்து தமிழ்நாடு தீண்டாமை  ஒழிப்பு முன்னணி அமைப்பினால் வலியுறுத்தப்பட்டு வருகிறது. இதன்ஒருபகுதியாக மாநிலம் முழு வதும் ஆணவப்படுகொலைகளை தடுக்க சிறப்பு சட்டத்தை இயற்றக் கோரி நடைபெற்ற ஆர்ப்பாட்ட இயக் கத்தின் தொடர்ச்சியாக கோவை யில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  கோவை தெற்கு தாலுகா அலுவ லகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட் டத்தில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் கோவை மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் இரா.ஆறுச்சாமி தலைமை வகித் தார். இதில் அமைப்பின் மாநில துணைப்பொதுச்செயலாளர் யு.கே.சிவஞானம்,தந்தை பெரி யார் திராவிடர் கழக பொதுச் செயலாளர் கு.ராமகிருட்டிணன், ஆதித்தமிழர் பேரவை பொதுச்செய லாளர் கோவை ரவிக்குமார், திரா விடத்தமிழர் கட்சி தலைவர் வெண் மணி. விடுதலை சிறுத்தைகள் கட்சி யின் நிர்வாகி குரு, தமிழ்புலிகள்  அமைப்பின் தலைவர் இளவேணில்  மற்றும் உடுமலை கௌசல்யா உள் ளிட்ட தலைவர்கள் பங்கேற்று உரை யாற்றினர். இதில் திரளானோர் பங் கேற்றனர்.