districts

img

முறைகேடுகளை களைந்து குடிநீர் பிரச்சனைக்குத் தீர்வு காண அமைச்சரிடம் ஊராட்சி தலைவர்கள் வலியுறுத்தல்

உடுமலை, மார்ச் 16 - திருமூர்த்தி அணை கூட்டு குடிநீர்  திட்டத்தில் இருக்கும் முறைகேடுகளை தடுத்து குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்று வளர்ச்சி திட்ட  பணிகளை ஆய்வு செய்ய வந்த அமைச் சரிடம் முறையிடப்பட்டது. உடுமலை தாலுக்கா குடிமங்கலம் ஒன்றியத்தில் அரசு திட்டப்பணிகளை ஆய்வு கூட்டம் கடந்த 16ஆம் தேதி வியாழக்கிழமை, செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் தலை மையில் பெதப்பம்பட்டி தனியார் திரு மண மண்டபத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுமக்களின் அடிப்படை தேவையான குடிநீர் மற்றும்  உள்கட்டமைப்பு வசதிகளான மகளிர் சுகாதார வளாகம், அங்கன்வாடி மையம், ஆரம்ப சுகாதார நிலையம், வீட் டுமனை பட்டா, சாலை வசதி, தெரு  விளக்கு மற்றும் நியாவிலை கடை கள் சிறப்பாக அனைத்து மக்களுக் கும் கிடைக்கும்  வகையில் அரசு செயல் படுவாதக கூறினார்.  பின்னர் அமைச்சரிடம் கூட்டத்திற்கு  வந்த உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பொது மக்கள் குடிமங்கலம் பகுதியில் நிலவும் குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும். மேலும் திருமூர்த்தி அணை கூட்டுகுடிநீர் திட்டத்தில் இருக் கும் குறைபாடுகளை சரி செய்ய வேண் டும் என்று கோரிக்கை வைத்தார்கள்.  இதற்கு அமைச்சர் குடிமங்கலம் ஒன்றியத்தில் 23 ஊராட்சிகளுக்கும் பயன்பெறும் வகையில் திருமூர்த்தி அணையில் இருந்து வரும் குடிநீர் திட் டம் அனைவருக்கும் பயன்படும் வகை யில் செயல்படுத்த நடவடிக்கை எடுக் கப்பட்டு வருகிறது. வரும் 2022 -2023 ஆம்  நிதியாண்டில் இந்த வேலைகள் முழுமை பெற்றவுடன் அனைத்து பகுதி களுக்கும் தடையின்றி குடிநீர் கிடைக் கும் என்றார். இந்த நிகழ்சியில் மாவட்ட  ஆட்சிதலைவர் வினீத் மற்றும் அரசு அதி காரிகள் கலந்து கொண்டார்கள்.