districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

சமூக ஆர்வலர் மீது  மண் கடத்தல் கும்பல் தாக்குதல்

சென்னை, நவ.21- மண் கடத்தும் கும்பல் சமூக ஆர்வலர் மீது கடும் தாக்கு தல் தொடுத்துள்ள நிலையில், தாக்குதலுக்கு உள்ளான வருக்கு சிகிச்சை அளிக்க, கோவை மருத்துவக் கல்லூரி முதல்வருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  கோவை மாவட்டம், பேரூர் தாலுகாவில் உள்ள கோட் டைக்காடு உள்ளிட்ட பகுதிகளில் மண் எடுக்க தடை விதித்து சென்னை உயர்நீதிமன்ற உத்தரவிட்டு உள்ளது. இந்நிலை யில், தடை விதிக்கப்பட்ட பகுதியில் மண் எடுத்து வந்த லாரி  நரசிபுரம் கிராமத்தில் கவிழ்ந்து கிடப்பதாக வழக்கு தொடர்ந்த சமூக ஆர்வலர் சிவா என்பவருக்கு தகவல் கிடைத்தது. அவர் சம்பவ இடத்திற்கு சென்ற போது அவரை 50 பேர் கொண்ட கும்பல் சுற்றி வளைத்து அடித்து உள்ளனர். இது குறித்து அவ ரது வழக்கறிஞர் எம். புருஷோத்தமன் சென்னை உயர்நீதி மன்றத்தில் முறையிட்டார். இந்த வழக்கை அவசர வழக்காக கருதி நீதிபதிகள் சதீஷ்குமார், பரத சக்கரவர்த்தி ஆகியோர் புதனன்று விசாரணைக்கு எடுத்தனர். அப்பொழுது வழக்கறி ஞர் புருஷோத்தமன், சிவாவை தாக்கிய கும்பல் மீது நடவ டிக்கை எடுக்கவில்லை. அவர் சட்ட விரோத கும்பல் கையில் சிக்கி உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்று கூறினார். உடனே நீதிபதி கள் அந்தப் பகுதியில் மண் எடுக்கக் கூடாது என்று ஏற்கனவே தடை உள்ள போது எப்படி மண் எடுக்க அனுமதி வழங்கப் பட்டது? என்று கேள்வி எழுப்பினர். கூடுதல் வழக்கறிஞர் ஜென ரல் ரவீந்திரன் ஆஜராகி, இந்த குற்றச்சாட்டுகள் எல்லாம் உண்மை தானா? என்பதை சரி பார்த்து தகவல் தெரிவிக்க அவகாசம் வேண்டும் என்றார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் இந்த வழக்கை விசார ணையை வருகிற 26 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர். அதே நேரம் மனுதாரர் சிவாவுக்கு தேவையான சிகிச்சை களை அளிக்கும்படி கோவை அரசு மருத்துவக் கல்லூரி  மருத்துவமனையின் முதல்வருக்கு, கூடுதல் வழக்கறிஞர் ஜெனரல் அறிவுறுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

உணவகங்களுக்கு அபராதம்

தருமபுரி, நவ.21- நெகிழி பைகளை பயன்படுத்திய உணவக உரிமையா ளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. தருமபுரி மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை மாவட்ட நிய மன அலுவலர் ஏ.பானுசுஜாதா மேற்பார்வையில், காரிமங்க லம் மற்றும் பாலக்கோடு ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவ லர் நந்தகோபால், மொரப்பூர் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் திருப்பதி ஆகியோர் அடங்கிய குழுவினர் காரி மங்கலத்துக்குட்பட்ட பகுதிகளில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, மொரப்பூர் சாலை, தருமபுரி சாலை, பாலக்கோடு சாலையில் செயல்பட்டு வரும் உணவகங்களில் தடை செய்யப்பட்ட நெகிழி பைகளில் உணவு மற்றும் சூடான சாம்பார், ரசம், தேநீர் பார்சல் செய்யப்படுகிறதா? செயற்கை  நிறமூட்டிகள் தவிர்க்கப்படுகின்றனவா? என்பது குறித்து ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் நெகிழி கவர்கள் பறி முதல் செய்யப்பட்டு, சம்பந்தப்பட்ட உணவகங்களின் உரி மையாளர்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப் பட்டது. மேலும், பாலக்கோடு சாலை உள்ள ஒரு கடையில் விற் பனைக்காக வைக்கப்பட்டிருந்த புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அந்த கடைக்கு ரூ.25 ஆயிரம் அப ராதம் விதிக்கப்பட்டது.

லஞ்சம் வாங்கிய மின் ஊழியர்கள் கைது

லஞ்சம் வாங்கிய மின் ஊழியர்கள் கைது சேலம், நவ.21- புதிய வீட்டில் மின் இணைப்புடன் மீட்டர் மாற்றி அமைக்க  லஞ்சம் வாங்கிய மின் ஊழியர்கள் 2 பேரை லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் கைது செய்தனர். சேலம் மாவட்டம், ப.காமநாயக்கன்பட்டி அருகே உள்ள  பூசாரிபட்டி பகுதியைச் சேர்ந்தவர் மணிவண்ணன் (40). தனது புதிய வீட்டின் முதல் மற்றும் இரண்டாவது தளத்திற்கு, மின் இணைப்புடன் மீட்டர் பொருத்துவதற்காக சேலம், மல்ல மூப்பம்பட்டி பகுதியில் உள்ள தமிழ்நாடு மின் உற்பத்தி பகிர் மான கழகம் இளநிலை பொறியாளர் அலுவலகத்தில் விண் ணப்பித்துள்ளார். அதற்கு மின்வாரிய வணிக ஆய்வாளர் மணி என்பவர், மின் இணைப்பிற்கு 3 ஆயிரம் ரூபாயும்,   சிறப்பு நிலை முகவர் ராதாகிருஷ்ணனுக்கு தனியாக ஆயிரம் ரூபாய் தர வேண்டும் எனவும் கூறியிருந்தார். லஞ்சம் கொடுக்க விரும்பாத மணிவண்ணன் இதுகுறித்து சேலம் லஞ்ச ஒழிப்பு காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் லஞ்ச ஒழிப்பு காவல் ஆய்வாளர் ரவிக்குமார் முருகன், உதவி ஆய்வாளர் நல்லம்மாள் உள்ளிட்ட போலீசார் மின்வாரிய அலுவலகத்திற்கு சென்று மறைந்திருந்தனர். அப்போது மணிவண்ணன், மணியிடம் ரூ.3 ஆயிரமும், ராதா கிருஷ்ணனிடம் ஆயிரம் ரூபாய் கொடுக்கும்போது, மறைந்தி ருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும், களவுமாக கைது  செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நூற்பாலையில் தீ விபத்து

உடுமலை, நவ.21- உடுமலை அருகே நூற்பாலையில் பயங்கர தீவிபத்து ஏற் பட்டது.  திருப்பூர் உடுமலை அருகே இந்திரா நகர் பகுதியில் ஜிடி என் என்டர்பிரைசஸ் நூற்பாலை உள்ளது. இங்கு 500க்கும்  மேற்பட்ட உள்ளூர் மற்றும் வெளிமாநில தொழிலா ளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் வியாழ னன்று அதிகாலை 2 மணி அளவில் பஞ்சு மற்றும் பேல்கள்  இருந்த கட்டடத்தில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. அப்போது,  நூற்பாலையில் இரவு நேர பணியில் பணிபுரிந்த தொழிலாளர் கள் அங்கும் இங்கும் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.பின்னர், உடுமலை தீயணைப்பு துறை வீரர்கள் தீயை அணைக் கும் பணிகளில் ஈடுபட்டனர். இந்நிலையில்,  தீ விபத்து குறித்து தெரிந்து கொண்ட  இரவு  பணிக்குச் சென்ற உறவினர்கள் நூற்பாலை முன் திரண்டதால்  பரபரப்பு ஏற்பட்டது. அப்போது, தொழிலாளர்கள் குறித்து  ஆலை நிர்வாகம் எந்த ஒரு தகவலையும் தெரிவிக்காதாதல் பதட்டமான சூழல் ஏற்பட்டது.  இதனிடையே தீ விபத்து நடைபெற்ற நூற்பாலையில் திருப்பூர் மாவட்ட சிஐடியு பஞ்சாலை தொழிலாளர் சங்கம் மாவட்டத் தலைவர் செல்வராஜ், மாவட்டப் பொருளாளர்  ஜெயபிரகாஷ், மாவட்டக்குழு உறுப்பினர் நாகராஜ் ஆகி யோர் நூற்பாலையில் ஆய்வு மேற்கொண்டு தீ  விபத்து குறித்து கேட்டறிந்தனர்.

குடிநீரைக் காய்ச்சி குடிக்க மாநகராட்சி ஆணையர் வலியுறுத்தல்

திருப்பூர், நவ. 21 - திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் 2, 3 மற்றும் 4வது குடிநீர்  திட்டத்திலிருந்து விநியோகம் செய்யும் நீரேற்றுப் பகுதிக ளான மேட்டுப்பாளையம் பவானி ஆற்றுப்படுகை மற்றும்  பவானி காவேரி ஆற்றுப்படுகைகளில் தற்போது மழை பெய்து வருவதால், ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு குடி நீர் செந்நீராக வருகிறது. எனவே மாநகராட்சி பகுதிகளில் விநி யோகம் செய்யப்படும் குடிநீரை பொதுமக்கள் காய்ச்சிப் பரு குமாறு மாநகராட்சி ஆணையாளர் எஸ்.ராமமூர்த்தி கேட்டுக்  கொண்டுள்ளார்.

சுமையை ஏற்படுத்தும் மின்வாரியம்

உடுமலை, நவ.21- மின்வாரியத்தில் உள்ள ஊழியர் பற்றாக் குறையால், பொதுமக்களுக்கு அதிகப்படி யான சுமை ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந் துள்ளது. உடுமலை மின்வாரியத்தின் நகர் பிரிவு  அலுவலகத்திற்கு உட்பட்ட, சங்கர் நகர் மின்  பகிர்மானம் மற்றும் பஜார் பகிர்மானத்தில்  இருக்கும் யுகேசி நகர், பொள்ளாச்சி ரோடு  பெட்ரோல் பங்க் வரையிலான பகுதியில்  உள்ள மின் இணைப்புகளுக்கு மின் கட்டணம் செலுத்துவது தொடர்பான மின்வாரிய அறி விப்பு வெளியிட்டுள்ளது. இதில், பொதுமக் கள் கடந்த செப்டம்பர் மாதம் செலுத்திய மின்  கட்டணத்தையே நடப்பு மாதமான நவம்பர் மாதமும் செலுத்த வேண்டும் என அறிவித் துள்ளது.  உடுமலை மின்வாரியத்தின் கடந்த சில  மாதமாக சில பகுதி மக்கள் கடந்த முறை  செலுத்திய மின் கட்டணத்தை இந்த மாதம் செலுத்த வேண்டும் என்கிறது. மின் கணக்கீடு செய்யத மின் வாரிய ஊழியர்களை வேறு வேலைக்கு பயனபடுத்தியதும், ஊழியர் பற்றாக்குறையும் காரணம் எனச் செல்லாப்படுகிறது. மின்வாரியத்தின் இந்த நடவடிக்கையால், பொது மக்களுக்கு பெரும்  சுமை ஏற்படுகிறது. தொடர்ந்து நான்கு மாதங் கள் மின் கணக்கீடு செய்யாமல், வரும் மாதம்  கணக்கீடு செய்யும் போது மின் உபயோகம் அதிகமாக கணக்கீடு வரும். இதனால் மின்  கட்டணம் பல மடங்கு அதிகமாக கட்ட வேண் டிய நிலை ஏற்படுகிறது.  மின்வாரியத்தால் பொதுமக்களுக்கு ஏற் படும் சுமையை போக்க மின்வாரியம் உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்கிற கோரிக்கை பொதுமக்களிடம் இருந்து எழுந்துள்ளது.

தெருநாய்களை கட்டுப்படுத்த வலியுறுத்தல்

திருப்பூர், நவ.21- இடுவாய் மற்றும் மங்கலம் ஊராட்சிப்  பகுதிகளில் சுற்றித்திரியும் தெரு நாய்களை  கட்டுப்படுத்த கோரி மாவட்ட ஆட்சியரிடம்  ஊராட்சி மன்றத் தலைவர்கள் புதனன்று மனு  அளித்தனர். தமிழக அரசின் உங்களைத் தேடி உங்கள்  ஊரில் திட்டத்தின் கீழ் கடந்த நவ.20 தேதி, திருப்பூர் செவந்தாம்பாளையத்தில் உள்ள  தெற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் குறை  தீர்ப்பு முகாம் நடைபெற்றது. இதில், இடு வாய், மங்கலம் ஊராட்சிகளில் தெரு நாய்கள்  கட்டுப்பாடு இன்றி கூட்டமாக சுற்றி திரிக்கி றது. இதனால் பள்ளிக்குச் செல்லும் மாணவ  மாணவிகளையும், கடைவீதிக்கும், வேலைக்கு செல்லும் பொது மக்களை இன்ன லுக்கு உள்ளாகின்றனர். மேலும், பலரை கடித் துள்ளது. இருசக்கர வாகனங்களில் செல்ப வர்கள் தெரு நாய்களால் விபத்தில் சிக்கி  தவிக்கின்றனர். இதுகுறித்து உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும். இடுவாய் ஊராட்சி  பகுதியில் ஓடைப்பகுதிகளில் உள்ள ஆக்கிர மிப்பை அகற்ற வேண்டும். சின்னகாளிபா ளையம் பகுதியில் இருந்து அறிவொளி நகர்  செல்லும் பொது பாதையில் உள்ள ஆக்கிர மிப்புகளை அகற்ற வேண்டும். ஸ்ரீராம் கார்டன்  பகுதியில் உள்ள பாசன வாய்க்கால் ஆக்கிர மிப்பு, ஊராட்சிக்கு தானம் செய்யப்பட்ட நில  ஆக்கிரமிப்பு ஆகியவற்றை அகற்ற வேண் டும் என இடுவாய் ஊராட்சி மன்றத் தலைவர்  கே.கணேசன், மங்கலம் ஊராட்சி மன்றத்  தலைவர் எஸ்.எம்.பி. மூர்த்தி ஆகியோர்  மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜிடம் மனு  அளித்தனர். மனுவை பெற்றுக் கொண்ட  மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுப்ப தாக உறுதி அளித்துள்ளார்.

அர்ஜூன் சம்பத் மகனை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி

அர்ஜூன் சம்பத் மகனை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோவை, நவ.21- நக்கீரன் கோபாலுக்கு, கொலை மிரட்டல் விடுத்த வழக் கில் கைது செய்யப்பட்ட அர்ஜுன் சம்பத் மகன் ஓம்கார்  பாலாஜியை ஒருநாள் காவலில் எடுத்து விசாரிக்க கோவை நீதி மன்றம் போலீசாருக்கு அனுமதி அளித்துள்ளது. ஈசா யோகா மையம் குறித்து செய்தி வெளியிட்ட நக்கீரன்  வார இதழை கண்டித்து கோவையில் இந்து மக் கள் கட்சி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், அர்ஜுன் சம்பத்  மகன், வாய்க்கொழுப்பாக நக்கீரன் ஆசிரியர் நாக்கை அறுக்க  வேண்டும் என்று பேசியிருந்தார். இவர் மீது கொலை மிரட்டல்  உள்ளிட்ட பிரிவுகளில் பந்தய சாலை போலீசார் வழக்கு பதிவு  செய்து கைது செய்தனர். இந்த வழக்கில் அவரை காவலில்  எடுத்து விசாரிக்க அனுமதி கேட்ட நிலையில், கோவை குற்றவி யல் 3 ஆவது நீதிமன்றம் ஒரு நாள் மட்டும் காவல் துறை  விசாரணைக்கு நீதிமன்றம் அனுமதி அளித்தது. வெள்ளி யன்று (இன்று) காலை 11 மணிக்கு மீண்டும் நீதிமன்றத் தில் ஆஜர்படுத்தவும் உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து  பந்தய சாலை காவல்துறையினர் ஓம்கார் பாலாஜியிடம்  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.