தருமபுரி, நவ.29- தமிழ்நாட்டில் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கைவிட வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியி னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மின்சார வாரியத்தை தனியார் மயமாக்கும் வகையில், ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டத்தை கண் டித்தும், தமிழ்நாடு அரசு இதனை கைவிட வேண்டும் என வலியுறுத் தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பென்னாகரம் கிழக்கு ஒன்றியக்குழு சார்பில் பெரும் பாலை மின்சார வாரிய அலுவல கம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. இப்போராட்டத்திற்கு சிபிஎம் ஒன்றியச் செயலாளர் ஜி.சக்தி வேல் தலைமை வகித்தார். இதில் மாநிலக்குழு உறுப்பினர் இரா.சிசு பாலன், மாவட்ட செயற்குழு உறுப் பினர் வி.மாதன், ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் பி.சக்கரைவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல், தருமபுரி ஒன்றியம், கிருஷ்ணாபுரம் மின்வாரிய அலு வலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு, சிபிஎம் ஒன்றியக் குழு உறுப்பினர் கே.கோவிந்த சாமி தலைமை வகித்தார். இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.மாரிமுத்து, ஒன்றிய செயலா ளர் என்.கந்தசாமி, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், மின் வாரிய அலுவலகத்தில் மனு அளிக் கப்பட்டது. உதகை நீலகிரி மாவட்டம், உதகை மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள மின்வாரிய அலுவலகம் முன்பு சிபிஎம் தாலுகா செயலா ளர் நவீன் சந்திரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கள் எல்.சங்கரலிங்கம், சுந்தரம், மூத்த தோழர் கே.ராஜேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர். கிளைச்செயலாளர் கிருஷ்ணன் நன்றி கூறினார். முடிவில் மின்வா ரிய செயற்பொறியாளர் அலுவல கத்தில் மனு அளிக்கப்பட்டது.