திருப்பூர் மாநகராட்சி முதலாவது மண்டலத்திற்கு உட்பட்ட சிறு பூலுவபட்டி சாலை குண்டும், குழியு மாக சேறும், சகதியுமாக போக்குவரத்துக்கு உகந்ததாக இல்லாத நிலையில் இருக்கிறது. எனினும் மாநகராட்சி நிர்வாகமோ, நெடுஞ் சாலைத்துறையோ இதைக் கண்டுகொள்ளா மல் கேட்பாரற்று கிடக்கிறது. இப்பகுதி மக்கள் தினம் தினம் அல்லற்பட்டு வருகின்ற நிலையில் சாலையை உடனடியாக செப்பனிடாவிட்டால் போராட்டத்திற்கு தள்ளப்படும் நிலை ஏற்படும் என்று ஆவேசமாக கூறுகின்றனர்.