districts

அறிவுச் செல்வத்தை வாரி வழங்கிய 10 நாள் திருவிழா இன்று நிறைவடைகிறது

நோயை தடுக்கும் சிறு தானிய உணவுகள்  

திருப்பூர் புத்தகத் திருவிழாவின் எட்டா வது நாள் நிகழ்வில் மரபு வழிப் பாதை  என்ற தலைப்பில் மருத்துவர் கு.சிவராமன்  பேசியதாவது:  இந்த ஆண்டு உலக சிறுதானிய ஆண்டு, இந்தியா உள்ளிட்ட அனைத்து நாடுகளிலும் கொண்டாடப்பட்டு வருகி றது. இந்தியாவில் 1 லட்சத்து 76 ஆயிரம்  அரிசி வகைகள் உள்ளன. இதில் நெல் ஜெய ராமன் மட்டும் டெல்டா மாவட்டங்களில் 179  வகையான அரிசிகளைச் சேகரித்துள்ளார். ஒவ்வொரு வகையான அரிசிக்கும் ஒவ் வொரு வகையான மருத்துவ குணம் உள் ளது. மிக வேதனையான விசயம் என்ன வென்றால் நம் ஊரில் டெல்டா மாவட்டங்க ளில் விளையும் அரிசியைக் கூட நாம் உட் கொள்வதில்லை. தற்போது பெருவாரி யாக துங்கபத்திரா நதிக்கரை மற்றும் ஆந் திராவில் இருந்து வரும் சன்ன ரக பொன்னி  அரிசியைத்தான் உட்கொண்டு வருகி றோம். ஆனால் மரபு அரிசிதான் சர்க் கரை, புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் வராமல் தடுக்கிறது. நம்மில் 45  வயதைக் கடந்த நபர்கள் காலையில் சிறுதா னிய உணவுகளை உட்கொண்டால் மட் டுமே நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த முடி யும். தமிழகத்தில் உள்ள 7.5 கோடிப் பேரில்  1 கோடிப் பேர் நீரிழிவு நோயால் பாதிக்கப் பட்டு உள்ளனர். இதில் 10 லட்சம் பேர் மட் டுமே நோயைக் கட்டுக்குள் வைத்துள்ள னர். மீதமுள்ள 90 சதவிகிதம் பேர் பல்வேறு  காரணங்களால் நீரிழிவு நோயைக் கட்டுக் குள் வைத்துக் கொள்வதில்லை. இதில் 30  சதவிகிதம் பேருக்கு புற்று நோய், மார டைப்பு, சிறுநீரக பாதிப்பு உள்ளிட்ட எதா வது ஒரு நோய் வருவதற்கு 80 சதவி கித வாய்ப்புகள் உள்ளன. ஆகவே நாம் சிறு தானிய உணவுகளான திணை, சாமை, கம்பு உள்ளிட்ட அரிசிகளை வாரத்துக்கு இரு நாட்களாவது எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கூறினார்.

திருப்பூர், பிப்.4- திருப்பூர் மாநகர மக்களின் மாபெரும் பண்பாட்டுத் திருவிழாவாக நடைபெற்ற 19 ஆவது திருப்பூர் புத்தகத் திருவிழா ஞாயி றன்று நிறைவு பெறுகிறது. தமிழ்நாடு அரசு, திருப்பூர் மாவட்ட நிர்வா கம் மற்றும் பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து  நடத்திய 19ஆவது திருப்பூர் புத்தகத் திரு விழா கடந்த ஜனவரி 27ஆம் தேதி தொடங்கி யது. 10ஆம் நாளான ஞாயிறன்று (இன்று) இந்த திருவிழா நிறைவு பெறுகிறது.  திருப்பூர் மாநகரில் கடந்த  2002ஆம் ஆண்டு முதலாக புத்தகத் திருவிழா நடத்தப் பட்டு வருகிறது. சென்னை பாரதி புத்தகால யம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து முதன்மு தலில் இந்த முயற்சியைத் தொடங்கினர். திருப்பூரில் புத்தக ஆர்வலர்கள் மற்றும் மக்க ளின் பேராதரவுடன் ஒவ்வொரு ஆண்டும்  புத்தகத் திருவிழா சிறப்பான முறையில்  நடத்தப்பட்டு வெற்றி பெற்று வந்திருக்கி றது.  எதிர்பாராத கொரோனா பெருந்தொற்று காரணமாக 2022 ஆம் ஆண்டும், அதற்கு முன்பு ஒரு முறை புத்தகத் திருவிழாவுக்கு குறிக்கப்பட்ட காலத்தில், நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்ற சூழலிலும் என இரண்டு ஆண்டுகள் மட்டும் புத்தகத் திரு விழா நடத்த இயலாத நிலை ஏற்பட்டது.

இது  தவிர மற்ற ஆண்டுகளில் தொய்வில்லாமல் புத்தகத் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது.  ஒவ்வொரு முறையும் புத்தகத் திருவிழா வுக்கு வரக்கூடிய பொது மக்கள், வாசகர்கள்  மற்றும் புத்தக பதிப்பாளர்கள், விற்பனையா ளர்களின் அனுபவம் மற்றும் ஆலோ சனைகளைப் பெற்று அடுத்தடுத்த முறை மெருகேறி வருகிறது. ஆரம்பத்தில் திருப்பூர்  டவுன்ஹால் மைதானத்தில் நடத்தப்பட்ட புத் தகத் திருவிழாவுக்கு மக்களின் பேராதர வைத் தொடர்ந்து இடம் மாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது. பின்னர் திருப்பூர் கே.ஆர். சி.சிட்டி சென்டரில் தொடர்ந்து நடத்தப்படுகி றது. இடையில் காங்கேயம் சாலை பத்மினி கார்டன் மைதானத்தில் நடத்தப்பட்டது. இம்முறை தமிழக அரசு மாவட்டந்தோ றும் புத்தகக் கண்காட்சியை நடத்துவது என்று  முடிவெடுத்த நிலையில், இங்கு தொடர்ந்து புத்தகத் திருவிழாவை நடத்தி வரும் பின்னல்  புக் டிரஸ்டுடன் இணைந்து இந்த  ஆண்டு  விழாவை நடத்துவதென தீர்மானிக்கப்பட் டது. தமிழக அரசின் முன்முயற்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் ஒத்துழைப்புடன் ஏற் கெனவே பின்னல் புக் டிரஸ்ட் புத்தகத் திருவி ழாவை நடத்திய அனுபமும் சேர்ந்து இம் முறை பல்வேறு தடங்கள்களைத் தாண்டி இந்த புத்தகத் திருவிழா மிகச்சிறப்பான முறையில் நடைபெற்றுள்ளது. முன்னெப் போதும் இல்லாத அளவுக்கு மாணவர்கள் மற்றும் புத்தக ஆர்வலர்கள், பொது மக்களின்  ஆதரவு பெருகியது. 30 ஆயிரத்துக்கும் மேற் பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் இக்கண் காட்சியைக் கண்டு களித்ததுடன்,

புத்தகங்க ளையும் வாங்கிச் சென்றது இளம் தலைமு றையை ஆரோக்கியமான அறிவுப் பாதை யில் நடைபோடச் செய்யக்கூடிய முக்கிய நிகழ்வாகும். அதேபோல் கடந்த ஞாயிறன்று மூன்றாம்  நாள் புத்தகத் திருவிழாவுக்கு திரண்டு வந்த  மக்கள் கூட்டம் இதுவரை  திருபபூர் புத்தகத்  திருவிழா காணாததாகும். திருப்பூர் மாநகரி லும், இம்மாவட்டத்திலும் தொழில் பாதிப்பு, வேலைவாய்ப்பு பாதிப்பு என பல்வேறு சிரம மான சூழ்நிலை இருந்தாலும் அவை எல்லா வற்றையும் கடந்து இந்த முறை புத்தக விற்ப னையும் அதிகளவில் நடைபெற்று உள்ள தாக பதிப்பகத்தார், விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். பல வகையிலும் முத்திரை பதித்துள்ள  இந்த மக்கள் திருவிழா இன்று நிறைவடை கிறது. கடைசி நாளான இன்றும் மக்கள் மிக  அதிகளவில் திரண்டு வருவார்கள் என்று எதிர் பார்க்கப்படுகிறது. நிறைவு நாள் சிந்தனை அமர்வில் ஆன்மிகப் பேச்சாளர் சொல்லின் செல்வர் சுகி சிவம் கற்போம் கற்றபடி நிற் போம் என்ற தலைப்பில் கருத்துரை ஆற்ற உள்ளார். திருப்பூர் வெற்றித் தமிழர் பேரவை யும், திருப்பூர் நகைச்சுவை மன்றமும் இணைந்து நிறைவு நாள் நிகழ்ச்சியை நடத்து கின்றனர்.