districts

img

இடதுசாரி இயக்கத்தில் சிங்காரவேலர்

கோவை, மார்ச் 20- கோவை மக்கள் சிந்தனை மேடையின் சார்பில், 7 ஆவது அமர்வு ஒண்டிபுதூரில் நடைபெற்றது. இதில், இடதுசாரி இயக்கத்தில் சிங்காரவேலர் பங்களிப்பு குறித்து கருத்துரை யாளர்கள் உரையாற்றினர். மக்கள் சிந்தனை மேடையின் அமர்விற்கு வி.தெய் வேந்திரன் தலைமை ஏற்றார். ஒருங்கிணைப்பாளர் யு.கே சிவ ஞானம் வரவேற்றார். இதில், முனைவர் பொன்.தமிழ்வானன்,  புலவர் திரு. பா.வீரமணி ஆகியோர் உரையாற்றினர். இதில், கருத்தாளர்கள் பேசுகையில், தமிழக பொதுவுடைமை இயக் கத்தில் ஒப்பற்ற தலைவர் சிங்காரவேலர்,  1920 முதல் 1930  ஆம் ஆண்டுகளிலிலேயே,  விஞ்ஞானத்தையும், தத்துவ  ஞானத்தையும் பெற்று எழுதியவர். இடது சாரி இயக்கங்க ளுக்கு மட்டுமல்லாது, ஒட்டுமொத்த மக்களுக்கும்,  தத்துவ  நூல்கள்,  விஞ்ஞானிகள் படிக்கின்ற நூல்களை படித்து அத னுடைய சாரம்சங்களை அறிவியல் அறிவு பெற பாட்டாளி  வர்க்கத்திற்கு எளிமையாக எடுத்துரைத்தவர். பல்வேறு மொழிகளை கற்றுத்தேர்ந்த சிங்காரவேலர் தமி ழின் சிறப்புகளை, தாய்மொழியில் சிறப்புகளை அன்றே கூறி யவர். இந்தியாவில் உள்ள மிகப்பெரிய ஆளுமைகள் எனறு குறிப்பிடப்பட்டவர்களில் பெரியார், அம்பேத்கர், காந்தியை  போல சிஙகாரவேலர் தமிழகத்தில் உள்ள பொதுவுடைமை இயக்கத்தின் தலைவர் என புகழாரம் சூட்டினர். முடிவில், ஒண்டிபுதூர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கிளைச் செய லாளர் எஸ்.ஆறுமுகம் நன்றி கூறினார்.