சிங்காநல்லூரிலிருந்து வெள்ளலூர் செல்லும் வழியில் நெடுஞ்சாலைத்துறையின் மூலம் மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்றுவருவதால் தற்போது பெய்துவரும் பருவமழையினால் தரைப்பாலம் வழியாக ஆற்றில் அதிகளவு வெள்ளநீர் செல்வதை மேயர் கல்பனா ஆனந்தகுமார், மாநகராட்சி ஆணையாளர் திரு.மு.பிரதாப் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். உடன் துணை மேயர் ரா.வெற்றிசெல்வன், கிழக்கு மண்டல தலைவர் இலக்குமி இளஞ்செல்வி உள்ளிட்டோர் இருந்தனர்.