தருமபுரி, ஆக.4- சிகிக்சைக்கு அனுமதிக்கப்பட்டி ருந்த வாலிபர் உயிரிழந்த நிலையில், தருமபுரி அரசு மருத்துவமனையின் அலட்சியமே காரணம் என உறவினர் கள் மருத்துவமனையை முற்றுகையிட் டனர். தருமபுரி மாவட்டம், சிவாடி பகுதி யைச் சேர்ந்தவர் வீரகரன் (23). பட்ட தாரியான இவர் அந்த பகுதியில் உள்ள டைல்ஸ் கடையில் பணிபுரிந்து வந்தார். இவருக்கு வயிற்றுவலி ஏற்பட்டு வந்த தாக கூறப்படுகிறது. இதனால் அவரை குடும்பத்தினர் தருமபுரி அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்நிலையில், வியாழனன்று அவ ருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு, உயிரிழந்தார். இதனால் அதிர்ச்சிய டைந்த பெற்றோர், உறவினர்கள் மருத் துவமனையை முற்றுகையிட்டனர். இது குறித்து தகவலறிந்து வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசு பாதம், துணை காவல் கண்காணிப்பா ளர் செந்தில்குமார் உள்ளிட்ட அதிகாரி கள் விசாரணை மேற்கொண்டனர். அப் போது அங்கு திரண்டிருந்த வீரகர னின் உறவினர்கள் கூறுகையில், நள்ளி ரவில் உடல்நலக்குறைவால் பாதிக்கப் பட்ட வீரகரனுக்கு உரிய நேரத்தில் முறையான சிகிச்சை அளிப்பதில் ஏற் பட்ட அலட்சியமே அவர் உயிரிழக்க கார ணம். இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர். இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் துறையினர் தெரிவித்தனர்.