ஈரோடு, நவ.7- மொடக்குறிச்சியில் நீதிமன்றம் அமைக்கக் கோரி அனைத்து வணிகர் கள் சங்கம் சார்பில் திங்களன்று கடை யடைப்பு மற்றும் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஈரோடு மாவட்டத்தின் 10 வருவாய் வட்டங்களில் ஒன்று மொடக்குறிச்சி. 3 குறுவட்டங்களுக்குட்பட்ட 50 வருவாய் கிராமங்களை உள்ளடக்கியது மொடக் குறிச்சி வட்டம். இங்கு வருவாய்த்துறை அலுவலகங்கள், தீயணைப்பு நிலை யம், காவல் நிலையம் மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கிளைகள் உள் ளன. அத்துடன் தற்காலிக நீதிமன்றம் அமைக்க அனைத்து வசதிகளுடன் கூடிய (பேரூராட்சி) கட்டடம் தயார் நிலையில் உள்ளது. அதனை நீதித் துறைக்கு பரிந்துரை செய்யாமல் கால தாமதம் செய்வதாகப் புகார் எழுந் துள்ளது. இந்நிலையில் தாமதமின்றி பரிந் துரை செய்து நீதி மன்றம் அமைய வேண் டும் என வலியுறுத்தி அனைத்து வணிகர் கள் கடையடைப்பு செய்தனர். மேலும், அப்பகுதி மக்கள் திரளாகக் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டம் வட்டாட்சியர் அலுவலகம் முன் நடைபெற்றது.