புதுதில்லி, டிச.10- “குடியுரிமை திருத் தச் சட்ட மசோதா கண் ணுக்குப் புலப்படாத இந்து - முஸ்லிம் பிரிவினை யை உருவாக்குகிறது” என்று சிவசேனா அதன் அதிகாரப்பூர்வ பத்திரி கையான ‘சாம்னா’வில் கடுமையாக சாடியிருந் தது. ஆனால், அந்த நிலை பாட்டை மாற்றிக் கொண்டு, நாடாளுமன்றத்தில் வாக்களித்துள்ளது. இது தொடர்பாக கேள்வி எழுப் பப்பட்ட நிலையில், “நாங் கள் தேச நலனிற்காக மசோ தாவிற்கு ஆதரவு தெரி வித்தோம்” என்று சிவ சேனா எம்.பி. அரவிந்த் சாவந்த் விளக்கம் அளித் துள்ளார்.