திருப்பூர், ஏப்.24- ஆளுநருக்கு பாதுகாப்பு என்ற பேரில், பட்டம் பெறச் சென்ற இந்திய மாணவர் சங்கத்தின் மாநில தலை வரை கைது செய்த காவல் துறை யினரைக் கண்டித்து திருப்பூரில் மாணவர் சங்கத்தினர் திங்களன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆளுநருக்கு பாதுகாப்பு என் கின்ற பேரில், பட்டம் பெறச் சென்ற இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலத் தலைவர் அரவிந்தசாமியை தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் காவல் துறையினர் கைது செய்தனர். இதை கண்டித்து, இந்திய மாணவர் சங்கத் தின் திருப்பூர் மாவட்டக்குழு சார்பாக குமரன் சிலை முன்பும், பல்லடம் தாலுகா குழு சார்பாக பல்லடத்தி லும் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. குமரன் சிலை முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, மாநிலக்குழு உறுப்பினர் ஷாலினி தலைமை ஏற் றார். மாநிலச் செயலாளர் க.நிருபன் சக்கரவர்த்தி, மாவட்ட செயலாளர் சம்சீர் அகமது ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதில் மாவட்ட நிர் வாகிகள் கல்கிராஜ், சபரி, ஜோதிபாசு உள்ளிட்ட 50 மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். பல்லடம் பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலை வர் பிரவீன் தலைமை ஏற்றார். இதில் தாலுகா செயலாளர் கிருஷ்ணகுமார் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.