கோவை, மே 12- அரசாணைக்கு புறம் பாக பிஎஸ்ஜி தனியார் கல் லூரி மாணவர் சேர்க்கை யில் ஈடுபடுவதாக கோவை மாவட்ட ஆட்சியரிடம், இந் திய மாணவர் சங்கத்தினர் புகார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் ஆட்சியரிடம் அளித்த மனுவில் தெரிவித்தி ருப்பதாவது, கோவை - அவிநாசி சாலையில் உள்ள பிஎஸ்ஜி தனியார் கலை மற்றும் அறிவி யல் கல்லூரி, இந்தக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை என்பது அரசு உதவி பெறும் பிரிவு, துறைகளுக்கு முறையான விண்ணப்பங்கள் தேதி அறிவிக்கப்பட்டு பெற்ற பிறகு அதற்கு உண்டான முறையில் தரவரிசை பட்டியல் தயார் செய்து, மதிப்பெண்கள் அடிப்படை யில் துறைவாரியாக மாணவர் சேர்க்கை அர சாணை 147ன்படி நடைபெறுவது வழக்கம். முதலில் மாணவர் சேர்க்கை நடத்திய பிறகு தான் சுயநிதி பாடப்பிரிவுகளுக்கு மாணவர் சேர்க்கை துவங்க வேண்டும். இந்த வழக்கத்திற்கு மாறாக இந்தாண்டு அரசு உதவி பெறும் துறை, பிரிவுகளுக்கும், தனியார் கல்லூரியில் சுயநிதி பிரிவுகளுக்கும் ஒரே நேரத்தில் மாணவர் சேர்க்கையில் பிஎஸ்ஜி நிர்வாகம் ஈடுபடுகிறது. தனியார் கல்லூரிகளுக்கு அரசு வழி காட்டுதலின்படி மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும். உடனடியாக மாவட்ட ஆட் சியர் இவ்விவகாரத்தில் தலையிட வேண்டும் என மனு அளித்துள்ளனர். முன்னதாக ஆட்சி யரிடம் மனு அளிக்கும் இயக்கத்தில், மாண வர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஆசாரு தீன், மாவட்ட தலைவர் ரமேஷ் கண்ணன், துணைச்செயலாளர் சந்தோஷ், செயற்குழு உறுப்பினர் ஆசாத் உள்ளிட்டோர் பங்கேற்ற னர்.