திருப்பூர், ஏப்.27- மல்யுத்த விளையாட்டு வீராங்கனை களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாஜக எம்.பி., மீது முறையான விசாரணை நடத்தி கைது நடவடிக்கை எடுக்கக்கோரி திருப்பூரில் சிஐடியு, மாதர், வாலிபர், மாண வர் சங்கத்தினர் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலை வரும், பாஜக எம்.பியுமான பிரிஜ் பூசன் ஷரன் சிங், 10க்கும் மேற்பட்ட வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தாக வீரர்கள் புகார் தெரிவித்தனர். ஒன்றியத்தின் ஆளும் கட்சியாக பாஜக இருப்பதால், பாஜக எம்.பி., யின் மீது எவ்வித நடவடிக்கையும் மோடி தலைமையிலான அரசு எடுக்கவில்லை. இத னையடுத்து, தில்லியில் மல்யுத்த வீர்ரகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற னர். இதன்தொடர்ச்சியாக தற்போது, வீரர்க ளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாஜக எம்.பி.,யை கைது செய்யும் வரையில், போராட் டத்தை கைவிடுவதில்லை என்கிற உறுதி யோடு தலைநகர் தில்லியில் தர்ணாவில் ஈடு பட்டு வருகின்றனர். இதனையடுத்து, மார்க் சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தாகாரத் உள்ளிட்ட தலை வர்கள் நேரில் சென்று தங்களின் ஆதரவை தெரிவித்தனர். மேலும், மல்யுத்த வீரர்கக ளுக்கு ஆதரவாக மாதர் சங்கம், வாலிபர் சங் கம், மாணவர் சங்கம், சிஐடியு, விவசாய சங் கம் ஆகிய அமைப்புகள் தேசம் தழுவிய ஆத ரவு போராட்டதிற்கு அறைகூவல் விடுத்துள் ளது. இதனையேற்று, பாதிக்கப்பட்ட வீராங் கனைகளுக்கு நீதி கேட்டு மாதர் சங்க மாவட்ட செயலாளர் கு.சரஸ்வதி தலைமை யில் திருப்பூரில் குமரன் சிலை முன்பு ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. இதில், சிஐடியு மாவட்ட செயலாளர் கே. ரங்கராஜ், விவசாய சங்க மாவட்ட செயலா ளர் ஆர்.குமார், வாலிபர் சங்க மாவட்ட செய லாளர் செ.மணிகண்டன், மாணவர் சங்க மாவட்ட துணை தலைவர் கல்கி ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதில் திரளா னோர் பங்கேற்றனர்.