தூத்துக்குடி, மே 11-ஒட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதிக்கு இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இத்தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திடம் , ‘‘எங்களுக்கு இட ஒதுக்கீடு அரசாணை என்னாச்சு’’ என பட்டியலின மக்கள் கேள்வி எழுப்பினர். இக்கேள்வியால் கடுப்பான ஓபிஎஸ் ‘‘தனிப் பட்ட முறையில் என்னைச்சந்தியுங்கள். பதில் சொல்கிறேன்’’ என சொல்லிவிட்டு, பிரச்சாரத்தை பாதியிலேயே முடித்துக்கொண்டு கிளம்பிவிட்டார்.