districts

img

எலச்சிபாளையத்தில் தீயணைப்பு நிலையம் அமைத்திடுக

சிபிஎம் வலியுறுத்தல்  நாமக்கல், பிப்.13- எலச்சிபாளையத்தில் தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு வலியுறுத்தியுள்ளது.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாமக்கல் மாவட்டக்குழு கூட்டம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம். அசோகன் தலைமையில் எலச்சிபாளை யம் கட்சி அலுவலகத்தில் நடைபெற் றது. இக்கூட்டத்தில் எலச்சிபாளையத் தில் புதிதாக தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும், அரசு ஆரம்ப சுகா தார நிலையத்தை தரம் உயர்த்த வேண் டும். அரசு மேல்நிலை மற்றும் துவக்கப் பள்ளி முன்பு உள்ள தேசிய நெடுஞ்சா லையில் சாலை விபத்துகளை தடுக்க  வேகத்தடை அமைக்க வேண்டும் உள் ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட் டது. இதனைத்தொடர்ந்து நடைபெற்ற  ஒன்றிய சிறப்பு பேரவை கூட்டத்திற்கு, கட்சியின் ஒன்றியச் செயலாளர் கே.எஸ். வெங்கடாசலம் தலைமை ஏற்றார். இதில் எலச்சிபாளையம் கிழக்கு, மேற்கு ஒன்றியக்குழுக்கள் மூலம் மேற் கொள்ளப்பட்ட உண்டியல் வசூல் நிதி, மாநில செயற்குழு உறுப்பினர் செ. முத் துக்கண்ணனிடம் ரூபாய் 1,07000 வழங்கப் பட்டது. இதில் கட்சியின் மாவட்டச் செய லாளர் எஸ்.கந்தசாமி, மாவட்ட செயற் குழு உறுப்பினர்கள், எஸ்.தமிழ்மணி, சு.சுரேஷ் உள்ளிட்ட திரளானோர் பங் கேற்றனர். இதில், உண்டியல் வசூல் பணியில் ஈடுபட்ட கட்சியின் முன்னணி ஊழியர்கள் கௌரவிக்கப்பட்டனர்.