districts

குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட சிறார்களுக்கு சேவைப்பணி

கோவை, ஜூலை 17- போக்சோ, கொள்ளை உள்ளிட்ட குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட நான்கு  சிறுவர்களை நல்வழிப்படுத்த முதல்  முறையாக இஎஸ்ஐ மருத்துவமனை யில் சமூக சேவை திட்டத்தின் கீழ் 15  நாட்கள் பணியற்றினர்.

கோவை மாவட்டத்தில் 18 வயதுக்கு  உட்பட்ட சிறுவர்கள் திருட்டு உள்ளிட்ட குற்ற சம்பவங்களில் ஈடுபடுவது அதிக ரித்து வருகிறது. குற்ற செயல்களில் ஈடுபடும் சிறுவர்களை நல்வழிப்படுத்த சிறுவர்கள் சீர்திருத்த பள்ளி உள்ளது. ஆனாலும், குற்றங்கள் தொடர்ந்து அதி கரித்து வருகிறது. இதன் காரணமாக குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டு உள்ள சிறுவர்களை நல்வழிப்படுத்த சிறுவர் நீதி வாரியத்தால் முடிவு செய்யப்பட்டது. அதில் நான்கு சிறு வர்கள் கோவை மாவட்டம் சிங்காநல் லூரில் உள்ள இஎஸ்ஐ மருத்துவம னைக்கு அனுப்பி வைத்தது. அங்கு அவர்கள் 15 நாட்கள் அவசர சிகிச்சை பிரிவு அல்லது வேறு ஏதாவது பிரிவில் பணி செய்ய அறிவுறுத்தப்பட்டனர். அவ்வாறு பணி செய்தால் மட்டும் ஜாமீன் வழங்கப்படும் என தெரிவிக் கப்பட்டது.

அதன்படி, சமூக சேவை திட்டத்தின்  கீழ் போக்சோ, கொள்ளை வழக்குக ளில் சிக்கிய 4 சிறுவர்கள் கடந்த மாதம்  இஎஸ்ஐ மருத்துவமனைக்கு அனுப்பி  வைக்கப்பட்டனர். அங்கு இருப்பிட மருத்துவ அதிகாரி மருத்துவர் மணி வண்ணன் மேற்பார்வையில் அச்சி றுவர்களுக்கு அறுவை சிகிச்சை பிரிவு, சமையல் கூடம் ஆகிய இடங்களில் 15  நாட்கள் பணி வழங்கப்பட்டது. அங்கு  அவர்கள் உதவியாளராக பணியாற்றி னர். சமையல் கூடத்தில் காய்கறி நறுக்கு தல், பாத்திரம் கழுவுதல் போன்ற பணி வழங்கப்பட்டது. அவசர சிகிச்சை பிரி வில் பணியாற்றிய சிறுவனுக்கு அங்கு  வரும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவ ஊழியர்களுக்கு உதவி செய்யும் பணி வழங்கப்பட்டது. இஎஸ்ஐ மருத்துவமனையின் இத்திட் டத்தின் மூலம் சிறுவர்களை நல்வழிப் படுத்த 15 நாட்கள் பணி வழங்கியது. இதுவே முதல் முறையாகும்.