districts

img

ஆளுநருக்கு சாம்பல் அனுப்பும் போராட்டம் - கைது

கோவை, மார்ச் 16- ஆன்லைன் சூதாட்டத்தால் உயிரி ழந்தவர்களின் சாம்பலை ஆளுந ருக்கு அனுப்பும் போராட்டத்தில் ஈடு பட்ட தந்தை பெரியார் திராவிட கழகத்தை சேர்ந்தவர்கள் கைது செய் யப்பட்டனர்.  ஆன்லைன் சூதாட்டத்தால் தற் கொலைகள் அதிகரித்து வருகிறது.  இந்த விளையாட்டை தடை செய்ய  வேண்டும் என சட்டமன்றத்தில் ஏக மனதாக தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. இரண்டுமுறை மசோதா அனுப்பியும் தமிழ்நாடு ஆளுநர்  ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பியது,  தமிழ்நாட்டு மக்களின் உணர்வு களுக்கு விரோதமாக ஆளுநர் செயல்படுகிறார் என்கிற குற்றச் சாட்டு எழுந்து வருகிறது. அதே நேரத்தில், ஆன்லைன் சூதாட்டத் தால் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொள்வோர் எண்ணிக் கையும் அதிகரித்து வருகிறது.  இந்நிலையில், ஆன்லைன் சூதாட்டத்தால் பணத்தை இழந்து தற் கொலை செய்து கொண்டவர்களின் சாம்பலை ஆளுநருக்கு அனுப்பும் போராட்டத்தை தபெதிக அமைப்பு அறிவித்தது.  

இதன்தொடர்ச்சியாக, தந்தை  பெரியார் திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் கு.ராமகிருட் டிணன் தலைமையில், கோவை  மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள தபால் துறை அலுவ லகம் முன்பு சாம்பல் அனுப்பும் போராட்டத்தை துவக்கினர். மேலும், போராட்டத்திற்கு வந்தவர்கள் தங்கள் கைகளில் ஆளுநருக்கு தபால் அனுப்ப சாம்பலுடன் வந் ்தனர். இதைத் தொடர்ந்து போலீசார்  போராட்டத்தில் ஈடுபட்ட 25 பேரை கைது செய்தனர். இதுகுறித்து கு.ராமகிருட்டிணன் கூறுகையில், தமிழ்நாடு ஆளுநர், தமிழ்நாட்டின் நலனுக்கான எந்த மசோதாவையும் நிறைவேற்றாமல் புறக்கணிக்கிறார். ஆன்லைன்  ரம்மியை தடை செய்யும் மசோ தாவை ஆளுநர் கிடப்பில் போட்டுள் ளார். அதனை தடை செய்ய ஆளு நருக்கு மனம் இல்லை. மாறாக,  சூதாட்டத்தை நடத்தும் முதலாளி களை வைத்து ஆலோசனை மேற் கொள்கிறார். இதுவரை 44 தமிழர்கள்  ஆன்லைன் ரம்மியால் உயிரிழந் துள்ளனர். இதை ஆளுநருக்கு உணர்த்தும் வகையில் இறந்த தமிழர் களின் சாம்பல் அனுப்பும் போராட்டம்  நடத்துகிறோம் என்றார். ஈரோடு இதேபோன்று ஈரோட்டில் தபெதிகவினர் காளைமாட்டு சிலை அருகே மாவட்ட செயலாளர் குமர குருபரன் தலைமையில் ஊர்வல மாய் தபால் நிலையம் நோக்கி சென் றனர். இவர்களை தடுத்து போலீசார்  கைது செய்தனர்.