சேலம் மேற்கு மாநகர் சிவதாபுரம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மூத்த தலைவர் மா.சின்னத்தம்பி அவர்களின் மகனும் கட்சியின் சேலம் மேற்கு மாநகர கமிட்டி முன்னாள் உறுப்பினருமான தோழர் சி.சுந்தரராஜன் அவர்களின் 2 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது. இதில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.குணசேகரன், மேற்கு மாநகர செயலாளர் எம்.கனகராஜ், மாவட்ட குழு உறுப்பினர்கள் பி.சந்திரன், பி.பாலகிருஷ்ணன், கிளை செயலாளர் சி.லெனின் மற்றும் குடும்பத்தினர் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.