districts

img

விளையாட்டு வீரர்களை வழியனுப்பும் விழா

தருமபுரி, டிச.13- சதுரங்கம் மற்றும் வாலி பால் போட்டிகளில் பங் கேற்கும் விளையாட்டு வீரர் களை  வழியனுப்பு விழா  தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்றது. தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் இளம் கலை  வணிகவியல் 2ஆம் ஆண்டு  மாணவி புஷ்பா, இளம் அறிவியல் இயற்பியல் துறை - 2ஆம் ஆண்டு மாணவி ராதிகா ஆகிய வீராங்க னைகள் சேலம் பெரியார் பல்கலைக்கழக மகளிர் சதுரங்க அணிக்காக தேர்வு செய் யப்பட்டுள்ளனர்.  இந்த வீராங்கனைகள் வரு கின்ற டிச.15 முதல் 17ஆம் தேதி வரை பெங்களூரு - ரேவா பல்கலைக்கழகத்தில் நடைபெறும் தென் மண்டல பல்கலைக் கழகங்களுக்கு இடையிலான சதுரங்க போட்டியில் பங்கு பெற உள்ளனர். இதோ போல் தென்மண்டல பல்கலைக் கழகங்களுக்கு இடையிலான வாலிபால் போட்டிகள் சென்னை எஸ்ஆர்எம் பல்கலைக் கழகத்தில் டிச.23 முதல் 27ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இப்போட்டிகளில் இளம்  அறிவியல் - ஊடகம் மற்றும் காட்சிப்ப திவியல் துறை 3ஆம் ஆண்டு மாணவர் சஞ்சய் சேலம் பெரியார் பல்கலைக்கழக வாலிபால் அணிக்காக தேர்வு செய்யப்பட்டு தென்மண்டல போட்டிகளில் பங்கேற்க உள்ளார். தென் மண்டல பல்கலைக்கழகங் களுக்கு இடையிலான போட்டிகளில் பங் கேற்க உள்ள மாணவ, மாணவிகளுக்கு திங்களன்று தருமபுரி  அரசு கலைக் கல்லூரி யில் நடைபெற்ற வழியனுப்பு விழாவில் கல்லூரி முதல்வர் முனைவர் ப.கி. கிள்ளி வளவன், உடற்கல்வி இயக்குநர் முனைவர் கு.பாலமுருகன், அனைத்துத்துறை தலை வர்கள் மற்றும் பேராசிரியர்கள், கௌரவ விரிவுரையாளர்கள், அலுவலகப் பணியா ளர்கள், விளையாட்டு ஆர்வலர்கள்   உள்ளிட் டோர் வாழ்த்தி வழியனுப்பி வைத்தனர்.