கோவை, ஜூலை 20- கோவையில் கல்லூரி மாணவர்களை குறிவைத்து கஞ்சா சாக்லெட் விற்பனை செய்து வந்தவரை போலீசார் கைது செய்து, அவரிடமிருந்து 40 கிலோ கஞ்சா சாக் லெட்டை பறிமுதல் செய்தனர். கோவை மாவட்டத்தில் ஏராளமான கல் லூரிகள் உள்ளது. இங்கு மாணவர்கள் மற் றும் இளைஞர்களை குறிவைத்து கஞ்சா விற் பனை அதிகரித்து வருகிறது. கஞ்சா கடத் தல் நபர்களை கைது செய்தாலும், முழுமை யாக கட்டுப்படுத்த முடியவில்லை. கஞ் சாவை நேரடியாக விற்றால் பிடிபடுவதாக கருதும் கடத்தல் ஆசாமிகள், கஞ்சாவை சாக்லெட் வடிவில் விற்பனை செய்து வரு கின்றனர். இதனை கல்லூரி மாணவர்கள் உட்பட பலருக்கும் ஒரு சாக்லெட் ரூ.100 என்று விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலை யில், ஆர்.எஸ்.புரம் பகுதியில் கஞ்சா சாக் லெட் விற்கப்படுவதாக போலிசாருக்கு தக வல் கிடைத்தது. அதன்பேரில் உதவி ஆணை யாளர் மணிகண்டன் தலைமையிலான தனிப் படையினர் அப்பகுதிக்கு சென்று சோதனை மேற்கொண்டனர்.
அப்போது கஞ்சா சாக்லெட்டுகளை விற் பதற்காக கடத்திச்சென்ற சேத்தன் (30), என்ற ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவரை காவல் துறையினர் கைது செய்தனர். மேலும், அவரிடமிருந்து 40 கிலோ கஞ்சா சாக்லெட் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து நடை பெற்ற விசாரணையில், சேத்தன் என்பவர் கோவை ரெங்கே கவுடர் வீதியில் தேநீர் கடை மற்றும் கோவில்பாளையம் பகுதியில் எலெக் டிரிக்கல் கடை நடத்தி வருவதும், தேநீர் கடை யில் வைத்து கஞ்சா சாக்லெட் விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. மேலும், கஞ்சா சாக்லெட் விற்பனையில் தொடர்பு டைய 5 பேரை போலிசார் தீவிரமாக தேடி வரு கின்றனர். கஞ்சா சாக்லெட்டை சாப்பிடுபவர்கள் போதையால் பாதிக்கப்படுவதுடன், சிறுநீரக கோளாறு, கல்லீரல் பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனிடையே கோவையில் கஞ்சா சாக்லெட் விற்பனையை முழுவதும் கட்டுப்படுத்த சோதனையை மேலும் தீவிரப்படுத்த காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் உத்தரவிட் டுள்ளார்.