பள்ளிபாளையம், ஜன.8- பள்ளிபாளையம் பகுதி யில் கழிப்பறைக்குள் வைத்து மதுவிற்பனை நடைபெற்று வரும் சம்பவத்தால் அப்பகுதி பொதுமக்கள் அதிர்ச்சிய டைந்துள்ளனர். நாமக்கல் மாவட்டம், பள்ளி பாளையம் நகராட்சி, 4 ஆவது வார்டுக்குட்பட்ட ஓங்காளி யம்மன் கோவில் பின்புறம், காவிரி கரையோரம் சமீபத்தில், சட்டமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் பொது கழிப்பி டம் கட்டப்பட்டு சில நாட்களுக்கு முன்பாக பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து விடப்பட்டது. இந்நிலையில், இந்த கழிப்பிட கட்டிடத்தின் முதல் அறையில் வைத்து, சட்ட விரோத மாக மதுபானம், கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாக புகார் கள் எழுந்தன. இதுகுறித்து தகவலறிந்த பள்ளிபாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, ஆய்வு மேற்கொண்ட னர். அப்போது போலீசார் வருவதை முன்கூட்டியே தெரிந்து கொண்ட மது விற்பனையாளர்கள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். தற்போது இதுகுறித்த படங்கள் சமூக வலைத் தளத்தில் வேகமாக பரவி வருகிறது. பள்ளிபாளையம் வட்டாரப் பகுதிகளில் அரசியல் கட்சி களின் துணையுடன், அதிகளவு சந்துக்கடைகள் முளைத்து வருவதால், பொதுமக்கள், அன்றாடம் கூலி வேலை செய்ப வர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே, இதில் ஈடுபடும் நபர்களை காவல் துறையினர் இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.