சாலை விபத்தில் ஒருவர் பலி
சத்தியமங்கலம், அக்.20- புளியம்பட்டி அருகே அரசு பேருந்தும், ஈச்சர் வேனும் மோதிக்கொண்ட விபத்தில் ஒருவர் பரிதாபமாக உயிரி ழந்தார். கோவையிலிருந்து சத்தியமங்கலம் நோக்கி அரசு பேருந்து 40க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்றுக் கொண்டிருந்தது. பொள்ளாச்சியைச் சேர்ந்த சிவலிங்கம் (43) என்பவர் ஓட்டி வந்தார். இதனிடையே, சத்தியமங்கலத்தி லிருந்து புளியம்பட்டியை நோக்கி, ஈச்சர் வேன் வந்து கொண்டிருந்தது. வேனை கர்நாடகாவைச் சேர்ந்த கணேஷ் (35) என்பவர் ஓட்டி வந்தார். புளியம்பட்டி அடுத்த புது ரோடு பகுதியில் வரும் போது, எதிர்பாராத விதமாக பேருந் தும், ஈச்சர் வேனும் மோதி விபத்துக்குள்ளாகின. இவ் விபத்தில் பேருந்தில் பயணம் செய்த கே.டி.என்.பாளை யத்தைச் சேர்ந்த நதீஷ் (21) என்பவருக்கு பேருந்தின் கம்பி முதுகில் ஏறி முன் பக்கமாக வந்தது. மேலும், பேருந்திலிருந்த சத்தியமங்கலத்தைச் சேர்ந்த தினேஷ், சம்பத் குமார், நாகராஜ், கேரளாவைச் சேர்ந்த ஹாசர் பளி கள்ளி, கோவையைச் சேர்ந்த முருகேசன் உட்பட 9 பேர் படு காயமடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த புளியம்பட்டி காவல் துறையினர், படு காயமடைந்தவர்களை மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், மருத்துவ மனைக்கு செல்லும் வழியில் நதீஷ் உயிரிழந்தார். இதுகுறித்து புளியம்பட்டி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசா ரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கருக்கலைப்பு மாத்திரைகள் விற்பனை?
கோவை, அக்.20- கருக்கலைப்பு மாத்திரைகள் உரிய அனுமதியின்றி விற்கப்படுவதாக புகார் எழுந்த நிலையில், மருந்துக் கடை களில் அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். கோவை மாவட்டத்தில், சட்ட விரோதமாக கருக்கலைப்பு மாத்திரைகள் விற்கப்படுவதாக புகார்கள் எழுந்தன. இந்நி லையில் கோவை மாவட்ட நலப்பணிகள் இணை இயக்குநர் ராஜசேகரன் தலைமையிலான குழுவினர், ஞாயிறன்று அதி ரடி சோதனையில் ஈடுபட்டனர். நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியிலுள்ள மருந்துக் கடைகள், கிளினிக்குகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டன. இதுகுறித்து ராஜசேகரன் கூறுகையில், மகப்பேறு மருத்துவர் பரிந்துரையின்றி கருக்க லைப்பு மாத்திரைகள் விற்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அரசாங்க அங்கீகாரம் இல்லாமல், தகுந்த மருத்துவ தகுதி இல்லாமல் கருக்கலைப்பில் ஈடுபட்டால், மூன்று முதல் ஏழு வருடங்கள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும், என்றார்.