ஈரோடு, டிச.24- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத் தின் ஈரோடு மாவட்டக்குழு சார்பில் வாசிப்பு இயக்கம் நடை பெற்றது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத் தின் ஈரோடு மாவட்டக்குழு சார்பில் ஈரோடு நாடகக் கொட்டகை அரங்கில், எழுத்தாளர் கு.அழகிரிசாமி நூற் றாண்டு வாசிப்பு நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்விற்கு மாவட்ட தலைவர் மு.சங்கரன் தலைமை தாங்கினார். நிகழ்வில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்ட செயலாளர் செ.கார்த்திகேயன், ஓவியர் மு.சுந்தரன், தமுஎகச மாவட்டச் செயலாளர் இ.கலைக்கோவன், கதை சொல்லி சரிதா ஜோ ஆகியோர் உரை நிகழ்த்தினர். நிறைவில் மாவட்டப் பொருளாளர் கி.கணேசன் நன்றியுரை ஆற்றினார்.