districts

img

நாமக்கல்: வாக்குப்பதிவு பணியில் ஈடுபடவுள்ள அலுவலர்கள் தேர்வு

நாமக்கல்,ஜன.29- நாமக்கல் மாவட்ட நகர்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்கு பதிவு பணியில் ஈடுபட வுள்ள அலுவலர்களை கணினி மூலம் குலுக் கல் முறையில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா  பி.சிங் தேர்வு செய்தார். நாமக்கல் மாவட்டத்தில் வருகின்ற  பிப்.19 ஆம் தேதியன்று 5 நகராட்சிகளுக் குட்பட்ட 153 வார்டுகள் மற்றும் 19 பேரூராட் சிகளுக்குட்பட்ட 294 வார்டுகள் என மொத் தம் 447 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற  உள்ளது. நகர்புற உள்ளாட்சி தேர்தலை யொட்டி 447 வார்டு உறுப்பினர் பதவிகளுக் கான தேர்தலில் 689 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படவுள்ளன. இந்த வாக்குச்சா வடிகளில் அரசு அலுவலகங்கள், அரசு  மற்றும் தனியார் பள்ளிகள், கல்லுாரிகளில் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் அவசர தேவைக்கான கூடுதல் பணியாளர்கள் உட்பட 3,328 அலுவலர்கள் மற்றும் பணி யாளர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப் பட உள்ளனர்.  இந்நிலையில்,வாக்குப்பதிவு பணியில் ஈடுபடவுள்ள அலுவலர்களை கணினி மூலம் குலுக்கல் முறையில் இரண்டு கட்டமாக மாவட்ட ஆட்சியர் தேர்வு செய்தார். கணினி மூலம் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப் பட்டு வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு பணி  நியமன ஆணைகள் வழங்கப்பட உள்ளது. வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு முதல் கட்ட பயிற்சியானது வருகிற ஜன. 31 ஆம்  தேதியன்று காலை 10 மணிக்கு வழங் கப்பட  உள்ளது. மேலும், நாமக்கல் மாவட்டத்தில் நகர் புற உள்ளாட்சி தேர்தலையொட்டி  தேர்தல் நடத்தை விதிமுறைகளை வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் பின்பற்றுவதை உறுதிசெய்ய 51 பறக்கும் படைகள் அமைக் கப்பட்டு, 8 மணி நேரத்திற்கு 17 பறக்கும் படை  குழுவினர் வீதம் பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர். இதேபோல், நாமக்கல் மாவட்ட ஆட்சியரக அலுவலகத்தில் விடு முறை நாட்கள் உட்பட அனைத்து நாட்களி லும், 24 மணி நேரம் செயல்படும் வகையில் கட்டணமில்லா அழைப்பு தொலைபேசி எண் 1800 599 4286 புகார் மையம் அமைக்கப் பட்டுள்ளது. இந்த கட்டுப்பாட்டு மையத்தை  கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்  என அறிவிக்கப்பட் டுள்ளது. முன்னதாக, இந்நிகழ்வின்போது  மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) வி.கோவிந்தராஜன் உட்பட நகராட்சி ஆணையாளர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள் கலந்து கொண்ட னர்.