districts

img

“போதை பொருட்கள் இல்லாத 120 கிராமங்கள் தேர்வு” சேலம் காவல் துறை அதிகாரிகளுக்கு டிஜிபி பாராட்டு

சேலம், நவ.7- சேலம் சரகத்தில் 120 கிராமங் கள் போதை பொருட்கள் இல்லாத பகுதிகளாக தேர்வு செய்யப்பட் டுள்ளது. இதற்கு காரணமாக சேலம் சரக காவல் துறைக்கு தமி ழக காவல் துறை இயக்குநர் சைலேந் திரபாபு பாராட்டு தெரிவித்தார். சேலம் சரகத்தில் சிறப்பாக பணி யாற்றிய காவலர்களுக்கு  பாராட்டு விழா, பல்வேறு குற்ற சம்பவகளில் பறிமுதல் செய்யப்பட்ட பொருட் களை ஒப்படைக்கும் நிகழ்ச்சி  மற்றும் காவல்துறை அதிகாரிக ளுடன் ஆய்வுக்கூட்டம் திங்களன்று  நடைபெற்றது. மாநகர காவல் ஆணையாளர் அலுவலக வளாகத் தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு காவல் துறை இயக்குநர் சைலேந்திரபாபு கலந்து கொண் டார். முன்னதாக, காவல் துறையின் அணிவகுப்பு மரியாதையை ஏற் றுக்கொண்டார். இதைத்தொடர்ந்து பல்வேறு குற்ற சம்பவங்களில் பறி முதல் செய்யப்பட்ட பொருட்களின  கண்காட்சியும் டிஜிபி பார்வை யிட்டு, மீட்கப்பட்ட பொருட்களை உரியவர்களிடம் வழங்கினார்.

இதன்பின் செய்தியாளர்களி டம் அவர் கூறுகையில், சேலம் மாநகரில் தற்போது 40 சதவிகிதம் கொலை வழக்குகள் குறைந்துள்ள தாகவும், லாட்டரி விற்பனை மற்றும் போதை பொருட்கள் தடை செய்வ தில் சேலம் சரகம் சிறப்பாக செயல் பட்டு வருவதாகவும் தெரிவித்தார். மேலும், சேலம் சரகத்தில் தற் போது வரை 120 கிராமங்கள் போதை பொருட்கள் இல்லாத கிராமங்களாக அறிவிக்கப்பட்டுள் ளதாக தெரிவித்த அவர், போதைப் பொருள் இல்லாத மாவட்டங்க ளாக சேலம் சரகத்தை உருவாக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருவ தாகவும் தெரிவித்தார். மேலும், கோவை கார் வெடிப்பு சம்பவம் போன்ற சட்டம் - ஒழுங்கு பிரச்சனை சமயங்களிலும், பண் டிகை காலங்களிலும் காவலர்களுக் கான கட்டாய வார ஓய்வு வழங்கு வதில் சிக்கல் ஏற்படுகிறது, இதை சரி செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித் தார். முன்னதாக இந்நிகழ்ச்சியில், சேலம் மாநகர காவல் ஆணையா ளர் நஜ்மல் ஹோதா, காவல் துறை துணைத்தலைவர் பிரவீன் குமார் அபினவ், சேலம் மாவட்ட காவல்  கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ் மற் றும் நாமக்கல், தருமபுரி, கிருஷ்ண கிரி மாவட்ட கண்காணிப்பாளர்கள், உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.