districts

img

ரூ.80 லட்சம் மதிப்பிலான யானை தந்தங்கள் பறிமுதல்: 3 பேர் கைது

திருப்பூர், மார்ச் 20- திருப்பூரில் ரூ.80 லட்சம் மதிப்புள்ள இரண்டு யானை தந்தங்களை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 3 பேரை கைது செய்தனர். திருப்பூர் வெள்ளியங்காடு பகுதியை சேர்ந்த அவி நாசியப்பன் சுமை தூக்கும் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவரது நண்பர்கள் முருகன், வீரப்பன் ஆகி யோர் பின்னலாடை நிறுவனங்களில் பணிபுரிந்து வருகின்ற னர். இவர்களிடம் கம்பம் பகுதியில் இருந்த நபர் ஒருவர் அறிமுகமாகி தன்னிடம் யானைத் தந்தங்கள் இருப்பதாக வும், அதை விற்றுத் தருமாறு கூறி இருக்கிறார். நான்கு நாட்களுக்கு முன்பு பேருந்து மூலமாக அவிநாசியப்ப னுக்கு யானை தந்தங்களை அனுப்பி உள்ளனர். அதைப் பெற்றுக் கொண்ட அவிநாசியப்பன் மற்றும் அவரது நண்பர் கள் மூன்று பேரும் சேர்ந்து விற்பதற்கு முயற்சியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் திருப்பூர் மாவட்ட வனச்சரக அலு வலர் செந்தில்குமாருக்கு திருப்பூரில் யானை தந்தங்கள் இருப்பதாக தகவல் கிடைத்தது. இதனடிப்படையில் தனிப் படை அமைத்து வன அலுவலர்கள் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டனர். அவிநாசியப்பனிடம் யானை தந்தங்கள் இருப்பதை உறுதிப்படுத்த வனச்சரக அலுவலர் செந்தில் குமார் யானை தந்தங்களை வாங்குவது போல அவிநாசி யப்பனிடம் பேசி அதனை காட்டும்படி கூறியுள்ளார். ரூ.80 லட்சம் வரை விலை நிர்ணயித்த பின்பு செந்தில்குமாருக்கு அவிநாசியப்பன் யானை தந்தங்களை காட்டியுள்ளார். இதையடுத்து அவிநாசியப்பன் மற்றும் அவரது நண்பர் களான வீரப்பன், முருகன் ஆகியோரை கைது செய்த வனத் துறையினர் அவர்களிடம் இருந்து 4 அடி உயரமுள்ள ரூ.80 லட்சம் மதிப்புள்ள இரண்டு யானை தந்தங்களையும், இரண்டு இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்த னர். மேலும் இவர்களுக்கு யானை தந்தம் வழங்கியது யார்? இறந்த யானையில் இருந்து தந்தங்கள் வெட்டப்பட்டதா? என் பது குறித்து வனத்துறையினர் தீவிர விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.