districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

தெலுங்கு மொழி பேசும் பகுதியில் ஓட்டு கேட்பதை தவிர்த்த சீமான்!

ஈரோடு, ஜன.30- ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடு பட்டு வரும் சீமான் தெலுங்கு பேசும் மக்கள் வசிக்கும் பகுதி யில் பிரச்சாரம் செய்வதைத் தவிர்த்தார். ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் பிரச் சாரம் வருகின்ற 3 ஆம் தேதி மாலையுடன் முடிவடைகிறது. இந்நிலையில், இந்தியா கூட்டணி கட்சியின் சார்பில் போட்டி யிடும் திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் வீடு வீடாகச் சென்று வாக்காளர்களை நேரில் சந்தித்து வாக்குகளை சேக ரித்து வருகின்றார். அவரை எதிர்த்து போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளருக்கு ஆதரவாக, சீமான் வாகனத்தில்  சென்றபடியே பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். பெரியார்  மீது தொடர்ந்து அவதூறை பேசி வரும் சீமானுக்கு எதிர்ப்பு  தெரிவித்து, மே 17 இயக்கத்தின் திருமுருகன் காந்தி, பேராசி ரியர் சுந்தரவள்ளி ஆகியோர் சீமானுக்கு எதிராகக் களமிறங்கி யுள்ளனர். இந்நிலையில் தெலுங்கு பேசும் தமிழர்கள் வந்தேறி கள் என்று கடந்த தேர்தலில் குறிப்பிட்டது சர்ச்சையானது. மோதலும் நடந்தது. இந்நிலையில் பெரியாரை விமர்சித்து வீர வசனம் பேசி வரும் சீமான், பலத்த காவல்துறையினர் பாதுகாப்புடன் பரப்புரை மேற்கொண்டு வருகிறார். அதேசம யம் தெலுங்கு மொழி பேசும் மக்கள் வசிக்கும் வீதியில் பிரச் சாரத்திற்குச் செல்லாமல் தவிர்த்து வருவது, இவரது வீர தீர  பராக்கிரமத்தை கண்டு ஈரோடு மக்கள் நகைத்து வருகின்ற னர்.

ஆளுநர் அரசியல்வாதியாக மாறுகின்ற பொழுது...

அமைச்சர் எ.வ.வேலு பேச்சு கோவை, ஜன.30- ஆளுநராக பணியாற்றினால் அனை வருக்கும் சிறப்பு, அவர் அரசியல்வாதியாக மாறினால் உரிய பதிலை தருவதாக கோவை யில் அமைச்சர் எ.வ.வேலு செய்தியாளர் களிடம் தெரிவித்தார். கோவை மாவட்டம், காந்திபுரம் பகுதியில்  ரூ.245 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் பெரியார் நூலகம் மற்றும் அறிவு சார் மைய  கட்டுமானப் பணிகளை பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ.வேலு, மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, மாநகராட்சி ஆணையா ளர் சிவகுரு பிரபாகரன், மேயர் ரங்கநாயகி உள்ளிட்டோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எ.வ.வேலு, கோவையில் நூலகம் அமைக் கப்பட வேண்டும் என்று தமிழக முதல்வர் அறிவித்ததை தொடர்ந்து, முதல்வரால் அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் துவங்கப் பட்டது. 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இந்த நூலகம் திறக்கப்படும். மேலும், மேட்டுப்பாளையம் சாலையில் சாய்பாபா காலனி பகுதியில் கட்டப்பட்டு வரும் மேம்பாலம் ஏற்கனவே காலதாமத மான ஒன்று என்பதை குறிப்பிட்ட அவர்  பெரும்பாலான மக்கள் கேட்டுக் கொண்ட தற்கு இணங்க முதலில் மேம்பால பணிகள் நடைபெறும், மேம்பாலத்தை விரிவாக்கம் செய்வது குறித்து வடிவமைப்புகள்  கேட்கப் பட்டுள்ளது. அது வந்த பின்பு மேற்கொண்டு அதற்கான பணிகள் நடைபெறும். மெட்ரோ விற்கும் பொதுப்பணித்துறைக்கும் சம்பந்த மில்லை, எனினும் அவர்களிடம் தடை யின்மை சான்று வாங்கியே எங்கள் பணி களை செய்கிறோம். அவிநாசி மேம்பாலம் விரிவாக்கம் குறித்து மதிப்பீடு தயார் செய் யப்பட்டு நிதி துறைக்கு அனுப்பி வைக்கப் பட்டுள்ளது. இந்த நிதி ஆண்டில் பணிகள் துவங்கி விடும் என்றார். தொடர்ந்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில ளிக்கையில், ஆளுநர் ஆளுநராக இருந்து  பணியாற்றினால் மாநிலம், மக்கள் என  அனைவருக்கும் சிறப்பு. ஆளுநர் அரசியல் வாதியாக மாறுகின்ற பொழுது  விமர்சிக்க வேண்டி உள்ளது. நாங்கள் எதை செய்தா லும் அதனை பாராட்ட மனம் இல்லாமல் ஏதா வது ஒரு குறை கூற வேண்டும் என்றே ஆளு நர் பேசிவருவதாக விமர்சித்தார்.

பணமோசடி விவகாரத்தில் பறிமுதல் செய்யப்பட்ட பணம் வங்கியில் ஒப்படைப்பு

சேலம், ஜன.30- அம்மாபேட்டை பகுதியில் தனியார் அறக் கட்டளை மூலம் பணமோசடி செய்யப்பட்ட  விவகாரத்தில் பறிமுதல் செய்யப்பட்ட பணம், நகைகள் வங்கியில் செலுத்தப்பட்டது. சேலம் மாவட்டம், அம்மாபேட்டை பகுதி யில், பாஜக முன்னாள் நிர்வாகி விஜயபானு என்பவர், தனியார் அறக்கட்டளை மூலம், பொதுமக்களிடம் பணம் பெற்று மோசடி செய்துள்ளார். இதுகுறித்து பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி யதில், ஆயிரக்கணக்கானோரிடம் கோடிக் கணக்கான ரூபாய் பணம் பெற்று மோசடி  செய்தது, தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அறக்கட்டளை அலுவலகத்தில் அதிரடியாக சென்று சோதனையிட்டபோது கட்டு கட்டான பணம் இருப்பது கண்டுபிடிக் கப்பட்டது. தொடர்ந்து, அறக்கட்டளையின் நிறுவனர் விஜய பானு, நிர்வாகிகள் ஜெயப் பிரதா, பாஸ்கரன் உள்ளிட்டோரை கைது செய் தனர். தொடர்ந்து, மண்டபத்தில் வைக்கப்பட் டிருந்த ரூ.12.65 கோடி ரொக்கம், 2.5 கிலோ  தங்கம், 13 கிலோ வெள்ளி ஆகியவற்றை பறி முதல் செய்து, ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில், கருவூலத்தில் வைக்கப்பட்டி ருந்த பணம், நகை, வெள்ளிப் பொருட்கள் ஆகியவற்றை துணை காவல் கண்காணிப்பா ளர் வெங்கடேஷ் தலைமையில் துப்பாக்கி ஏந்திய போலீசார், கோட்டை பகுதியில் உள்ள எஸ்பிஐ வங்கியில் செலுத்தினர்.

கோழிக்கழிச்சல் தடுப்பூசி முகாம்

நாமக்கல், ஜன.30- நாமக்கல் மாவட்டத்தில் கோழிக்கழிச்சல் நோய் தடுப் பூசி முகாம் சனியன்று (நாளை) துவங்குகிறது. நாமக்கல் மாவட்ட ஆட்சி யர் ச.உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கோழி  வளர்ப்பானது, நிலத்தில் கிடைக்கக்கூடிய உணவு வகைகள் மூலமாக நடை பெற்று வருகிறது. கோழி களை எளிதாகப் பாதிக்கக் கூடிய நோயாக கோழிக் கழிச்சல் உள்ளது. இதைக்  கட்டுப்படுத்த வாரந்தோறும் சனியன்று கால்நடை மருந் தகங்களில் இலவச தடுப்பூ சிப் பணி மேற்கொள்ளப்படு கிறது. இந்நிலையில், பிப்ர வரி மாதம் முதல், இரண்டாம் வார சனிக்கிழமைகளில் பிப்.1 முதல் 14 ஆம் தேதி வரை கோழிக்கழிச்சல் நோய் தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளது. இந்த நாட்களில் கால்நடை மருந்த கங்களில் நடைபெறும் முகாம் களில் தங்களது கோழிக ளுக்கு இலவசமாக தடுப்பூசி செலுத்தி பயனடையலாம், எனக் கூறப்பட்டுள்ளது.

சாலையை சீரமைக்க வலியுறுத்தல்

சேலம், ஜன.30- சேலம் மாவட்டம், வாழப் பாடி அடுத்த பொன்னாரம் பட்டி பகுதி வழியாக மங்க ளபுரம் நெடுஞ்சாலை செல் கிறது. பொன்னாரம்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே இச்சாலையானது குண்டும், குழியுமாக காணப்படுகி றது. இதனால் அவ்வழியாக  செல்லும் வாகன ஓட்டிகள், தடுமாறி விபத்துக்குள்ளாகி வருகின்றனர். பழுதடைந்த நெடுஞ்சாலையை அதிகாரி கள் உடனடியாக சீரமைத்து, விபத்து நடைபெறாத வண் ணம் நடவடிக்கை எடுக்க  வேண்டும், என அப்பகுதி பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் வலியுறுத்தி யுள்ளனர்.

பல்லடம் மகளிர் காவல் நிலைய  ஆய்வாளருக்கு பிடிவாரண்ட்

திருப்பூர், ஜன.30 - பல்லடம் மகளிர் நிலைய காவல் ஆய்வாளருக்கு பிடி வாரண்ட் பிறப்பித்து, நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட இளம் சிறார் நீதிக்குழுமம் செயல்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் பல்லடம் மகளிர் காவல் நிலையத் தில் போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டது. 16 வயது சிறுமிக்கு 17 வயது சிறுவன் பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் சிறுவன் கைது செய்யப்பட்டு கூர்நோக்கு இல்லத் தில் சேர்க்கப்பட்டார். இதுதொடர்பான வழக்கு விசாரணை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 23-ந் தேதி, திருப்பூர் மாவட்ட இளம் சிறார் நீதிக்குழுமத்தில் விசாரணைக்கு எடுக்கப்பட்டு வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இதுபோன்ற வழக்குகளை 6 மாதத்துக்குள் விசாரணை முடிக்க அறிவு றுத்தப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணைக்கு புதனன்று வந்தது. ஏற்க னவே 7 சாட்சிகளின் விசாரணை முடிந்தது. இந்த வழக்கின் விசாரணை அதிகாரியான பல்லடம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் கவிதாவிடம் விசாரணை நடத்த ஏற்க னவே உத்தரவிடப்பட்டது. ஆனால் வழக்கின் விசார ணைக்கு புதனன்று கவிதா ஆஜராகவில்லை. இதைத்தொடர்ந்து வழக்கின் விசாரணைக்கு ஆஜராகாத ஆய்வாளர் கவிதாவுக்கு பிடிவாரண்டு பிறப்பித்து இளம் சிறார் நீதிக்குழும முதன்மை நடுவர் செந்தில்ராஜா, சட்ட  உறுப்பினர்கள் முருகேசன், மல்லிகா ஆகியோர் உத்தர விட்டனர்.

தெருநாய்களால் கால்நடைகள் பறிபோகும் வேதனை கிராமசபை கூட்டங்களில் விவசாயிகள் போராட்டம்

திருப்பூர், ஜன.30– தெருநாய்களால் கால்நடைகள் பறிபோகும் வேதனைச் சம்பவங்கள்  தினந்தோறும் நடந்து வரும் நிலை யில் இப்பிரச்சனைக்கு முற்றுப் புள்ளி வைக்க வலியுறுத்தி குடியரசு  தினத்தில் திருப்பூர் மாவட்டத்தில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டங் களில் விவசாயிகள் போராட்டங்க ளில் ஈடுபட்டனர். திருப்பூர் மாவட்டத்தில் குறிப் பாக வெள்ளகோவில், காங்கேயம், ஊத்துக்குளி ஒன்றியங்களில் தெரு நாய்கள் கடித்துக் குதறி ஆடுகள்,  கன்றுக்குட்டிகள், கோழிகள் உயி ரிழக்கும் சம்பவங்கள் ஒவ்வொரு நாளும் நடைபெற்று வருகின்றன. இப்பிரச்சனையில் தெருநாய் பெருக் கத்தைக் கட்டுப்படுத்தவும், தெரு நாய்களால் கால்நடைகளை இழந்த  விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கவும் விவசாயிகள் கோரி  வருகின்றனர். குறிப்பாக விவசாயம்  கடும் நெருக்கடியில் இருக்கும் நிலை யில் கால்நடை வளர்ப்புத்தான் அவர் களுக்குக் கை கொடுத்து வருகிறது. கும்பலாக கிராமங்களில், நகரங்க ளில் சுற்றுத்திரியும் நாய்களால் பட்டி களில் அடைக்கப்பட்டிருக்கும் ஆடு கள், கன்றுக்குட்டிகள், பண்ணைக ளில் வளர்க்கப்படும் கோழிகள் என  மொத்தமாக கடித்துக் குதறப்பட்டு உயிரிழக்கின்றன. இதனால் கால் நடை வளர்ப்பை மட்டுமே நம்பிப் பிழைக்கும் விவசாயிகளுக்கு லட்சக் கணக்கான ரூபாய் வருமான இழப்பு  ஏற்படுவதுடன், அடுத்து என்ன செய் வதென்று தெரியாத நிர்க்கதியான நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். இதற்காக பல கட்டப் போராட்டங் களை முன்னெடுத்த நிலையில், திருப்பூர் மாவட்ட நிர்வாகம் பாதிக் கப்பட்ட விவசாயிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தி அரசின் கவனத் துக்குக் கொண்டு சென்று 45 நாட்க ளில் உரிய இழப்பீடு பெற்றுத் தருவ தாக காங்கேயம் வட்டாட்சியர் மூலம் உத்தரவாதம் அளிக்கப்பட்டது. இதற்காக காத்திருந்த நிலையில் அரசு எவ்வித உத்தரவும் பிறப்பிக் காததால், விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர். அதேசமயம் தெருநாய்  பிரச்சனை தீராத தலைவலியாக  தொடர்ந்து கொண்டிருக்கிறது. எனவே அடுத்தக்கட்ட போராட் டத்தை நடத்துவது பற்றி விவசாயி கள் பலவிதமான ஆலோசனைகளை மேற்கொண்டனர். இதற்கிடையே அமைச்சர் மு.பெ.சாமிநாதனை விவ சாயிகள் சந்தித்து உயிரிழந்த கால்ந டைகளுக்கு சந்தை மதிப்பில் இழப் பீடு கோரினர். அவரும் உரிய நடவ டிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இந்த சூழ்நிலையில் ஜனவரி 26  குடியரசு தின கிராமசபைக் கூட்டங் கள் அறிவிக்கப்பட்டன. இந்த கூட்டங் களையே தெருநாய்களால் கால்ந டைகள் இழக்கப்படும் பிரச்ச னையை முன்வைத்து போராட்டங் கள் நடத்த திட்டமிட்டனர். அதன்படி குடியரசு தினத்தன்று வெள்ளகோவில், காங்கேயம், ஊத் துக்குளி ஆகிய ஊராட்சி ஒன்றியங் களில் ஊராட்சிகளில் நடைபெற்ற 25  கிராமசபைகளில் இது குறித்து கால்ந டைகளுடன் பங்கேற்ற விவசாயிகள்  போராட்டத்தில் ஈடுபட்டனர். கருப்புக்  கொடி ஏந்தியும், ஏற்கெனவே அரசு  கொடுத்த உறுதிமொழி என்ன ஆனது  என்று கேள்வி எழுப்பியும் போராட் டம் நடத்தினர். இப்பிரச்சனையில் மாவட்ட நிர் வாகத்தின் சார்பில் அடுத்த 20 நாட்க ளில் இழப்பீடு பெற்றுத் தரப்படும்  என்று காங்கேயம் வட்டாட்சியர் மோகனன் போராடிய விவசாயிக ளிடம் எழுத்துப்பூர்வமாக மீண்டும் உத்தரவாதம் அளித்தார். ஏற்கெனவே 45 நாட்கள் காத்தி ருந்த நிலையில் மீண்டும் 20 நாட் கள் காத்திருப்பதென்று விவசாயி கள் தீர்மானித்துள்ளனர். அத்துடன் வரும் 31ஆம் தேதி திருப்பூர் மாவட்ட  விவசாயிகள் குறைதீர்க் கூட்டம் நடைபெற உள்ளது. இதிலும் தங்கள்  பிரச்சனையை எழுப்பி அரசின் கவ னத்தை ஈர்ப்போம் என்று விவசாயி கள் கூறியுள்ளனர்.

சமூக வேறுபாட்டை ஏற்படுத்தும் சுவர்: விசிக புகார்

அவிநாசி, ஜன.30- தடுப்புச்சுவர் கட்டி, சமூக வேறுபாட்டை ஏற்படுத்தும் நடவடிக்கையை ஆட்சியர் தலையிட்டு, தடுத்து நிறுத்த வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் புதனன்று ஆட்சியரிடம் மனு அளித்தனர். அவிநாசி ஒன்றியத்தில், திருப்பூர் ஆட்சி யர் பல்வேறு ஆய்வுப்பணிகளை மேற்கொண் டார். அப்போது, விடுதலை சிறுத்தை கட்சி யின் மாவட்டச் செயலாளர் பழ.சண்முகம் தலைமையில் விசிகவினர் மனு அளித்தனர்.  அதில், வேலாயுதம்பாளையம் ஊராட்சியில்  ஆராசராயர் திருக்கோயில், காத்தவராயர் கோவில் சுமார் 90 சென்ட் நிலப்பரப்பில் கடந்த 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த  கோயில் உள்ளது. இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள இந்த கோவிலில், தற்போது குடமுழுக்கு வேலையையொட்டி பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. கோவிலின் இருபுறமும் மண்டபங்கள் கட்டப் பட்டுள்ளது. இந்த மண்டபத்தில் அனைத்து சமூகத்தை சார்ந்தவர்களின் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். இந்நிலையில், ஒரு சமூகத்தை சார்ந்தவர்கள் இந்து அறநிலையத்துறையின் நிர்வாகத்திற்குள் நுழைந்து தவறான வழி காட்டுதலின் பேரில் தற்பொழுது மண்டபத் திற்கும், கோவிலுக்கும் நடுவே ஒரு தடுப்புச் சுவர் அமைத்து வருகின்றனர். இது சமூக  வேறுபாட்டை ஏற்படுத்தும் நடவடிக்கையாக கருதுகிறோம். இதனை தாங்கள் தலையிட்டு  தடுப்பு சுவர் அமைப்பதை நிறுத்தி, சமூக ஒற் றுமையை பாதுகாத்திட வேண்டும் என தெரி விக்கப்பட்டுள்ளது.

வங்கிகளின் புதிய நடைமுறையால் விவசாயிகள் பாதிப்பு

உடுமலை, ஜன.30- வங்கிகளில் நகைகளை அடமானம் வைத்து வாங்கிய கடன் தொகைக்கான வட்டி மற்றும் வாங்கிய தொகையை முழுமையாக செலுத்திய பின் மீண்டும் கடன் பெற்றுக்கொள்ளாலம் என்ற  புதிய நடைமுறையை மாற்ற வேண்டும் என உடுமலை பகுதியைச்சேர்ந்த விவ சாயிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து அப்பகுதியினர் தெரி விக்கையில் எங்களின் அவசர தேவை களுக்காக வங்கிகளில் தங்க நகை களை அடமானமாக வைத்து பணம் பெறுகிறோம். பின்னர் ஒரு வருடம் முன்பாக நகைகள் மீது, வாங்கிய கடன் தொகைக்கு உன்டான வட்டி தொகையை மட்டுமே செலுத்தி, மீண் டும் அங்கேயே அடமானம் வைத்து வந்தோம். ஆனால், தற்போது வழக்க மாக இருந்ததை மாற்றி அசலையும் வட்டியையும் சேர்த்து முழுமையான பணத்தையும் செலுத்தித்தான் புதுப் பிக்க வேண்டும் என்று வங்கி நிர் வாகம் தெரிவிக்கின்றது. இந்த மாற்றத்தால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மிகக்கடுமை யாக பாதிக்கபடுகின்றனர். தங்களின் அவசர தேவைக்கு என  தங்கள் நகை களை அடகு வைத்து அதில் வரும் பணத்தை வைத்துத்தான்  பிழைப்பு  நடத்தி வருகிறார்கள். இப்படி இருக்கும் நிலையில், அசலையும், வட்டியும் செலுத்தி நகை கடனை புதுப்பிக்க முடியாத நிலை ஏற்படுகிறது. இந்த நடவடிக்கை கடன்சுமையை மேலும் அதிகமாக்குமே தவிர இந்த முறையால் எந்த நன்மையும் பலனும் இல்லை. குறிப்பாக, தங்களுடைய நகையின் மீது ரூ.3 லட்சம் நகை கடன் பெற்று  இருந்தால் வாங்கிய கடன் மற்றும் வட்டியை வங்கியில் கட்ட வேண்டும்  என்றால் தனியார் நிதி நிறுவனங்களிடம்  கடன் பெற வேண்டிய நிலை ஏற்படுகி றது. இது போன்ற பெரிய தொகையை  அவர்களிடம் கடனாக பெறும் போது  நிலம் அல்லது  வீட்டு பத்திரத்தை அட மானம் வைத்து தான் அசலை வங் கிக்கு கட்ட அதிக வட்டிக்கு கடன் பெற வேண்டிய நிலை ஏற்படுகிறது. வங்கி யின் புதிய நடைமுறையால்  விவாசாயி கள் மற்றும் பொது மக்கள்  கடுமையாக பாதிக்கபட்டு மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். குறிபிட்ட நாளில் பணம் கட்ட முடியாமல் போனால் நகைகள் ஏலத்துக்கு போகும் நிலைமையில்  கண்ணீர் விடும் நிலையில் உள்ளார் கள். ஒன்றிய அரசு வருடம் ரூ.6000 விவ சாயிகளுக்கு கொடுத்து விட்டு 4% (33) பைசாவில் விவசாசய நகை கடன் பெற்ற நிலையில் தற்பொழுது  அந்த மானியத்தையும் இந்த வருடம் நிறுத்தி விட்டார்கள் . எற்கனவே, இது விவசாயிகளுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்திய நிலையில், ஏற்கனவே உரம், மருந்து கள் மற்றும் வட்டியில்லா கடன் என்று விவசாயிகளுக்கு தரப்பட்ட மானி யத்தை ஒன்றிய அரசு  நிறுத்தி விட்ட நிலையில் மீண்டும் நகைக்கடன் புதுப் பிப்பு நடைமுறையை மாற்றி உள்ளது அனைவருக்கும் கடுமையான பாதிப்பு  ஏற்படுத்தும். உடனடியாக ஒன்றிய அரசு இந்த விசயத்தில் தலையிட்டு விவசாயி கள்  தங்க நகை மீது பெறப்படும் கடன் களுக்கு மானியத்தை உடனே விடு விக்க நடைவடிக்கை எடுக்க வேண்டும். வங்கியில் தங்க நகைகள் மீது கடன் பெற்ற பொது மக்கள் மற்றும் விவசாயி கள் பெற்ற கடன் தொகை மற்றும் வட் டியை சேர்த்து செலுத்தி புதுபிக்கும் புதிய நடைமுறையை உடனே ரத்து  செய்ய வேண்டும். ஏற்கனவே வட்டியை  மட்டும் செலுத்தி புதுபிக்கும் நடை முறையை கொண்டு வர ஒன்றிய அரசு நடைவடிக்கை எடுக்க வேண்டும், என்ற னர்.

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை வாலிபருக்கு 20 ஆண்டு சிறை

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை வாலிபருக்கு 20 ஆண்டு சிறை உதகை, ஜன.30- நீலகிரியை சேர்ந்த தம்பதிக்கு 4 வயதில் ஒரு மகள் உள் ளார். குடும்ப தகராறு காரணமாக மனைவி தனது 4 வயது  குழந்தையுடன் பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். சிறுமி யின் தாயார் வேலைக்கு செல்வதால், குழந்தையை பக்கத்து  வீட்டில் விட்டுள்ளார்.  இந்நிலையில், 2019 ஆண்டு டிசம்பர் 6 ஆம் தேதியன்று  சிறுமிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால், தாயார்  நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையில் குழந்தையை சேர்த்தார். மருத்துவ பரிசோதனையில் சிறு மிக்கு பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்டது தெரிய வந்தது.  இதுகுறித்து சிறுமியின் தாயார் மகளிர் காவல் நிலையத் தில் புகார் அளித்தார். போலீசார் விசாரணையில், பக்கத்து  வீட்டை சேர்ந்த 20 வயது வாலிபர், சிறுமிக்கு பாலியல்  வன்கொடுமையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து போலீசார்  போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு  செய்து வாலிபரை கைது செய்தனர். இந்த வழக்கு விசா ரணை உதகை மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.  தற்போது இந்த வழக்கில் தீர்ப்பு வியாழனன்று கூறப்பட் டது. இதன்படி குற்றம் சாட்டப்பட்ட வாலிபரின் மீதான குற்றச் சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.11 ஆயிரம் அபராதமும் விதித்து நீதி பதி எம்.செந்தில்குமார் உத்தரவிட்டார். மேலும், பாதிக்கப் பட்ட சிறுமிக்கு அரசு தரப்பில் ரூ. 10 லட்சம் நிவாரணம் வழங்க  உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து வாலிபர் கோவை மத்திய  சிறையில் அடைக்கப்பட்டார்.

கணக்கம்பாளையம் ஊராட்சியை உடுமலை நகராட்சியுடன் இணைக்க கோரிக்கை

திருப்பூர், ஜன. 30 - உடுமலைப்பேட்டை ஊராட்சி ஒன்றி யத்தில் உள்ள கணக்கம்பாளையம் ஊராட்சியை உடுமலைபேட்டை நக ராட்சியுடன் இணைக்க வேண்டும் என  திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனுவினை அளித்தனர். கணக்கம் பாளையம் ஒருங் கிணைப்பு குழு செயலாளர் எம்.செல்வ ராஜ் தலைமையில் அந்த ஊராட் சியைச் சேர்ந்தவர்கள் வியாழனன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் நேரில் கோரிக்கை மனு அளித்தனர். இதில், உடுமலைப்பேட்டை நகராட்சியை ஒட்டி  கிழக்கு, மேற்கு, தெற்கு பகுதிகளில்  5.7 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் கணக்கம்பாளையம் ஊராட்சி அமைந் துள்ளது. இங்கு சுமார் 30,000 மக்கள்  வசித்து வருகின்றனர். 16 ஆயிரத்துக் கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ள னர். இந்த ஊராட்சியில் வெஞ்சமடை,  கணேசபுரம், சாதிக் நகர், சென்னிமலை பாளையம், எஸ்.வி. புதூர், எஸ்.வி. புரம், காந்தி நகர், ஜீவா நகர், ஸ்ரீராம் நகர்  ஆகிய ஒன்பது குக்கிராமங்கள் அமைந் துள்ளன. அத்துடன் பல புதிய குடியி ருப்புகளும் உருவாகி வருகின்றன.  உடுமலைப்பேட்டையில் நீதிமன் றம், சார்பதிவாளர் அலுவலகம் உள் ளிட்ட பல்வேறு முக்கிய அரசு அலுவல கங்கள் இந்த ஊராட்சி பகுதியை ஒட்டி  அமைந்துள்ளன. அத்துடன் உடுமலை  வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம்,  அரசு தொழிற்பயிற்சி நிலையம், வட்டா ரப் போக்குவரத்து அலுவலகம், ஆதிதி ராவிடர் மாணவர் விடுதி ஆகியவை கணக்கம்பாளையம் ஊராட்சி பகுதிக் குள் அமைந்துள்ளன. கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் கணக்கம்பாளையம் ஊராட்சியை உடுமலைப்பேட்டை நக ராட்சி உடன் இணைப்பதற்கு மக்கள் கோரிக்கை வைத்து போராடி வரு கின்றனர். உடுமலைப்பேட்டை நக ராட்சியிலும் கணக்கம்பாளையம் உட் பட 14 ஊராட்சிகளை நகராட்சியுடன் இணைப்பதற்கு தீர்மானம் நிறைவேற் றப்பட்டுள்ளது. அதேபோல் உடு மலைப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தி லும் கணக்கம்பாளையம் உள்ளிட்ட ஊராட்சிகளை நகராட்சியுடன் இணைக்க கோரிய கடிதம் அனுப்பப்பட் டுள்ளது. அண்மையில் நடைபெற்ற கணக்கம்பாளையம் கிராம சபை  கூட்டத்திலும் உடுமலை நகராட்சியுடன்  இணைப்பதற்கு 474 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. 16 விண்ணப்பங்கள் மட்டுமே இணைக்க கூடாது என்று அளிக்கப்பட்டது. எனவே கணக்கம்பாளையம் பகுதி  மக்களின் கோரிக்கையை ஏற்று உடு மலைப்பேட்டை நகராட்சியுடன் இணைக்க வேண்டும். குடிநீர், சாலை, கழிவு நீர் வடிகால் வாய்க்கால், தெரு விளக்கு, பொது சுகாதாரம் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றி பிரச் சனைகளுக்கு தீர்வு காண உடுமலைப் பேட்டை நகராட்சி உடன் இணைக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.