districts

img

மக்களை திசை திருப்பவே மதவெறி நடவடிக்கைகள்

பெ.சண்முகம் பேச்சு கோபி, பிப்.23- மக்களை திசை திருப்பவே மத வெறி நடவடிக்கைகளை பாஜக தீவி ரப்படுத்துகிறது என்றும், இதனை மக்கள் புரிந்து கொண்டு இந்த  பாசிச பாஜக அரசை விரட்டியடிக்க நாம் அனைவரும் பாடுபட வேண்டும்  என மார்க்சிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் பெ.சண்முகம் உரை யாற்றினார்.  ஈரோடு மாவட்டம், கோபிசெட்டி பாளையத்தில் தியாகி லட்சுமண அய்யரின் 108 ஆவது பிறந்த நாள்  விழாவை ஒட்டி, தமிழ்நாடு தீண் டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. சங்கத் தில் மாவட்டத் தலைவர் பி.பி.பழ னிச்சாமி தலைமையில் நடைபெற்ற கருத்தரங்கில், ததீஒமு தாலுகா செயலாளர் கே.சி.ரங்கசாமி, மார்க் சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா ளர் ரகுராமன் ஆகியோர் வரவேற் புரை நிகழ்த்தினர். தொடர்ந்து, சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட,  தமிழக அரசிடம் அம்பேத்கர் விருது பெற்றவரும், மார்க்சிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பி னருமான சண்முகத்திற்கு பாராட்டு விழா நடைபெற்றது.  இதனைத்தொடர்ந்து, நிகழ்ச்சி யில் பேசிய பெ.சண்முகம், சுதந்திர இந்தியாவில் பட்டியிலின மக்கள் மீது இன்னும் தாக்குதல்கள் நடந்து  கொண்டு தான் உள்ளது. பள்ளி  மாணவன் சின்னதுரை மீது கொலை  வெறி தாக்குதல், வேங்கை வயல்  சம்பவம் உள்ளிட்ட பல்வேறு சம்பங் கள் உள்ளன. இதற்கெல்லாம், நாம்  அனைவரும் தலைகுனிய வேண்டிய தாக உள்ளது. இன்றைய சூழலில், ஒன்றிய ஆட்சி பொறுப்பில் உள்ள பாஜக, ஆர்எஸ்எஸ் என்ற ஆக்டோபஸ் கரங்களில் சிக்கி இருக்கிறார்கள். பல சாதிய அமைப்புகளை உரு வாக்கி கொண்டுள்ளார்கள். அனை வரும் சமம் என்ற இந்திய அரசியல மைப்பு சட்டத்தை ஏற்று கொள்ளா மல், இந்தியாவில் உள்ள சாமியார் கள் அனைவரும் வாரணாசியில் கூட்டம் ஒன்றை நடத்தி, மனுதர்ம அடிப்படையில் புதிய அரசியல் சாசனத்தை இயற்ற வேண்டி கொடுத்துள்ளனர். 2024ல் மீண்டும் பாஜக ஆட்சிக்கு  வந்தால் மனுதர்ம அடிப்படையில் புதிய அரசியல் சாசனத்தை இயற் றினால், இந்தியாவின் நிலை என்ன வாகும். மக்களை திசை திருப்பவே மதவெறி நடவடிக்கைகளில் ஈடுப டுகிறார்கள் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். அதற்கு, ஜன நாயக முறைபடி தேர்தல் நடைபெற  அனைவரும் பாடுபட வேண்டும் என்றார்.  இந்நிகழ்ச்சியில் ததீஒமு மாநில  துணைப் பொதுசெயலாளர் சிவஞா னம், ததீஒமு மாவட்டச் செயலாளர் அண்ணாதுரை, மாவட்ட செயற்குழு உறுப்பினர் முனுசாமி மற்றும் சிபிஎம், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம், ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர் சங்கம், சிஐடியு உள் ளிட்ட மாவட்ட, தாலுகா, நிர்வாகி கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.