districts

img

புகையிலை பொருட்கள் விற்பனை இளம்பிள்ளையில் 4 கடைகளுக்கு சீல்

 இளம்பிள்ளை, டிச.9-  இளம்பிள்ளையில் புகையிலை பொருட்களை விற்பனை செய்த நான்கு கடைகளுக்கு சீல் வைக்கப் பட்டது. சேலம் மாவட்டம், இளம்பிள்ளை மற்றும் இடங்கண சாலை அதன் சுற்றுப்புறத்தில் விசைத்தறி மூலம் சேலை உற்பத்தி மற்றும் அதன் சார்பு தொழிலில் வடமாநில தொழிலாளர்கள் அதிக அளவில் ஈடுபட்டுள்ளனர். இவர் கள் அதிகமாக புகையிலை பொருட்களை உபயோகித்து வருவதாகவும், இதனை அறிந்த ஒரு சிலர் மளிகை கடை கள், பெட்டிக் கடைகளில் குட்கா, பான்பராக் உள்ளிட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்து வருவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபினவ் உத்தரவின் பெயரில் சங்ககிரி காவல் துணைக் கண் காணிப்பாளர் நல்லசிவம் மேற்பார்வையில், மகுடஞ் சாவடி காவல் ஆய்வாளர் இளங்கோ தலைமையிலான காவல்துறையினர் புதனன்று இரவு அதிரடி சோதனை மேற்கொண்டனர்.  அப்போது பெருமாகவுண்டம்பட்டி பகுதியில் ஜகுபர் அலி (50), இளம்பிள்ளை சவுண்டம்மன் கோவில் பகுதியில் யாசர்அராவத் (28), இளம்பிள்ளை, புதுரோடு பகுதியில்  குமார் (35), இடங்கணசாலை மேட்டூர் பகுதியில் சீனிவா சன் (42), ஆகியோர் மளிகை கடை மற்றும் பெட்டிக் கடைகளில் இருந்த சுமார் ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள புகையிலைப் பொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்து, அவர்கள் 4 பேரையும் கைது செய்தனர். மேலும் இவர்களின் கடைகளுக்கு வருவாய் துறையினர் சீல் வைத்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற் பட்டது.